முன்னாள் எம்.எல்.ஏ-வின் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் - 5 பேர் மீது வழக்கு!

0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாத்தையா(வயது 76). இவரின் மனைவி வசந்தமாலா. கடந்த 1991-1996 ஆட்சிக்காலத்தில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து சாத்தையா அ.தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் அருகே வெள்ளப்பொட்டல் கிராமத்தில் 10.23 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன்பின் சாத்தையா தனது குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

குன்னூர்

இந்நிலையில் கடந்த இரு நாள்ட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர், முன்னாள் எம்.எல்.ஏ. சாத்தையாவுக்கு போன் செய்து, உங்களுக்கு சொந்தமான இடத்தில் சிலர் அத்துமீறி பணி செய்து வருவதாக தகவல் சொல்லியதாக தெரிகிறது. இதையெடுத்து விருதுநகர் மாவட்டம் வெள்ளப்பொட்டல் கிராமத்திற்கு வந்த சாத்தையா, தனக்கு சொந்தமான நிலத்தில் சிலர் அத்துமீறி பணிகள் மேற்கொண்டுவருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது, அந்தநிலம் திருமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் பெயரில் பத்திரம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து தனது நிலம் மோசடியாக போலிப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்த சாத்தையா, இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் முறையிட்டார். அவரின் முறையீட்டில்பேரில் போலிப் பத்திரப்பதிவு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் விசாரணையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜமுனியாண்டி(75), அவரின் மனைவி முத்துலட்சுமி(72) ஆகியோர் குன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆஜராகி தாங்கள்தான் சாத்தையா, வசந்தமாலா என அறிமுகப்படுத்தியிருப்பதும், போலிஆணங்களை தயார்செய்து, முன்னாள் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான 10.23 ஏக்கர் நிலத்தையும் தனது மகன் முருகன் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது.

சார்பதிவாளர் அலுவலகம்

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.சாத்தையா, நத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த முருகன், அவரின் தந்தை ராஜமுனியாண்டி, தாய் முத்துலட்சுமி மற்றும் போலி பத்திரப்பதிவிற்கு உடந்தையாக செயல்பட்ட சார்பதிவாளர் சார்லஸ் பிரபு, பத்திர எழுத்தர் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க முன்னாள் எம்.எல்.ஏ-வின் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் - 5 பேர் மீது வழக்கு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top