`மன்னராகும் மூன்றாம் சார்லஸ்'... 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழா - என்ன ஸ்பெஷல்?!

0

பிரிட்டனை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்தது இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் இயற்கை எய்தினார். அதற்குப் பிறகு, இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றாலும், அதிகாரப்பூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில், முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரிட்டனில் வெகு ஜோராக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முடிசூட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்

தங்கமுலாம் பூசப்பட்ட குதிரை வண்டி!

1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாய் நடைபெற்றது. அவரின் மறைவுக்குப் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டுமொரு பிரமாண்ட முடிசூட்டு விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து. மே 6-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு 2,000-த்துக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்த 850 பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த 850 தன்னார்வலர்களும் `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' வென்றவர்கள். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹியும் ஒருவர். இவர் கொரோனா காலத்தில் சிறப்பான சேவையாற்றியதற்காகப் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடமிருந்து பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் சார்லஸ்

மே 6-ம் தேதி காலையில், மன்னர் மூன்றாம் சார்லஸும், அவரின் மனைவி ராணி கமிலாவும், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருவார்கள். அதுவும் தங்கமுலாம் பூசப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் வருவார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்தை ஆண்ட மன்னர் 700 ஆண்டுகாலமாகப் பயன்படுத்திய தங்கமுலாம் பூசப்பட்ட அரியாசனம் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சிம்மாசனத்தில், பிரிட்டன் ராஜவம்சத்துக்குச் சொந்தமான செங்கோலை ஏந்தியபடி மன்னர் சார்லஸ் அமர்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை தெரிவிக்கிறது.

கோஹினூர் வைர கிரீடத்தை அணிவாரா சார்லஸ்?

அந்த அரியாசனத்தில் மன்னர் சார்லஸ் அமர்ந்த பிறகு, அவருக்கு மதகுருமார்கள் ஆசீர்வாதம் செய்வார்கள். பின்னர், புனித எட்வர்ட்டின் கிரீடம் மன்னர் சார்லஸுக்குச் சூட்டப்படும். இதையடுத்து பக்கிங்ஹாமுக்கு திரும்பும் சார்லஸ், அரண்மனையில் பால்கனியிலிருந்து அங்கு கூடி நிற்பவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றுவார். அன்றைய தினமே கமிலாவும் பிரிட்டன் அரசின் ராணியாக முறைப்படி முடிசூடிக்கொள்வார்.

சார்லஸ் முடிசூட்டு விழா தினத்தன்று, கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிவாரா என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருந்துவந்தது. இந்த நிலையில், புனித எட்வர்ட்டின் கிரீடம்தான் சார்லஸுக்குச் சூட்டப்படுமென பக்கிங்ஹாம் அரண்மனையே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.

நாட் மை கிங்

கடும் எதிர்ப்பு?

சார்லஸின் முடிசூட்டு விழாவைக் காண இங்கிலாந்து மக்கள் பலரும் ஆர்வத்துடன் இருந்தாலும், ஒரு பகுதி மக்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர். ``நவீன சமுதாயத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் குடியரசாகப் பிரிட்டன் மாற வேண்டும்’’ என்று பலரும் அரச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர். `நாட் மை கிங்' என்ற பதாகைகள் ஏந்தி சார்லஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்கப் பலரையும் இங்கிலாந்து காவல்துறை கைதுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த எதிர்ப்புகளை மீறி முடிசூட்டு விழாவைப் பிரிட்டன் அரசு எப்படி நடத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


மேலும் படிக்க `மன்னராகும் மூன்றாம் சார்லஸ்'... 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழா - என்ன ஸ்பெஷல்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top