``பிரதமர் மோடி எங்களிடம் ஆதரவு கேட்டார்" - கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?!

0

பிரதமர் நரேந்திர மோடி இராண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா மாநிலம் வந்தார். நேற்று தினம் கொச்சியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற யுவம் -2023 என்ற நிகழ்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். இளைஞர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால், பிரதமர் உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நேற்று இரவு, கொச்சி தாஜ் விவண்டா ஹோட்டலில் கிறிஸ்தவ பேராயர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். சீரோ மலபார் சபை ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க சபை கர்த்தினால் பசேலியோஸ் மார் கிலிமீஸ், ஆர்த்தோடெக்ஸ் சபையின் கர்த்தினால் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்ட 8 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பேராயர்கள் வெளிப்படையாக பேசி உள்ளனர்.

பேராயர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி

ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. வட இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை பிரதமர் கவனத்துக்கு கொண்டுசென்றோம். கிறிஸ்தவ சமூகத்தை பாதுகாப்பதாக பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார். அனைத்து மதத்தினருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டியலின கிறிஸ்தவர்களின் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பின்போது விவாதித்தோம். கேரள மக்களுக்கு தேவையானவற்றையும், புதிய வளர்ச்சி திட்டங்களையும் கொண்டுவருவதாக பிரதமர் தெரிவித்தார். பாரத நாடு முழுவதையும் ஒரே சீராக பார்ப்பதாகவும், வளர்ச்சிக்கு கேரளாவும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். போப் ஆண்டவரை இந்தியாவுக்கு அழைத்துள்ளதாக பிரதமர் கூறினார். கேரளாவின் தேவைகள் குறித்து பிரதமரிடம் பேச முடிந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. திறந்த மனதுடன் பிரதமர் நரேந்திரமோடி எங்களிடம் உரையாடினார்" என்றார்.

பேராயர்களை சந்தித்த பிரதமர் மோடி

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட யாக்கோபாயா சபையின் பேராயர் ஜோசப் மார் கிரிகோரியோஸ் கூறுகையில், "பிரதமருடனான சந்திப்பில் பொதுவான விஷயங்களில் கிறிஸ்தவர்களின் அச்சம் குறித்து பகிர்ந்துகொண்டோம். விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்களின் பிரச்னைகளையும் எடுத்துரைத்தோம். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத கேரளா போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

பிரதமர் மோடி அடிக்கடி கேரளாவுக்கு வரவேண்டும் எனவும் பேராயர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தோம். சர்ச்சுகள் சம்பந்தமான பிரச்னைகளை தெரிவித்தோம். அதற்கு தீர்வு ஏற்படுத்த உதவி செய்வதாக பிரதமர் தெரிவித்தார். கேரளா மாநிலத்துக்கு வழங்கவேண்டிய எல்லா நலத்திட்டங்களும் வழங்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

பேராயர்களிடம் உரையாடும் பிரதமர் மோடி

வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்காது எனவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோவா உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசையும். பா.ஜ.க-வையும் ஆதரிப்பதாகவும் கூறினார். எங்களின் பிரார்த்தனையும், ஆதரவும் வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அது உண்டு என நாங்கள் தெரிவித்தோம். பிரதமருடனான சந்திப்பு உற்சாகம் அளிக்கிறது. சபை தலைவர்கள் சொல்வதைக்கேட்டு மக்கள் ஓட்டுப்போடவேண்டும் என்பது இல்லை. அரசு எந்த வகையில் மக்களுக்காக செயல்படுகிறது என்பதை பொறுத்தே மக்கள் முடிவு செய்வார்கள். இதை நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம். மக்களின் வேதனைகளையும், அச்சம் குறித்தும் பிரதமரிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் அரசியலாக பார்க்கவில்லை" என்றார்.


மேலும் படிக்க ``பிரதமர் மோடி எங்களிடம் ஆதரவு கேட்டார்" - கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top