``எல்லோருக்கும் தேசத்துரோகச் சான்றிதழ்; புல்வாமா தாக்குதலுக்கு பதில் வேண்டும்!" - சுப்ரியா ஸ்ரீனேட்

0

"எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டும்" என அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான தகவல்களைக் கூறியிருக்கிறார். இது குறித்து மோடி அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

அதில், 'வீரர்கள் விமானத்தில் ஏன் அனுப்பப்படவில்லை?; எல்லைக்கு மிக அருகில் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து எப்படி பதுக்கி வைக்கப்பட்டது?; பிரதான சாலையைச் சந்திக்கும் மற்ற சாலைகள் ஏன் மூடப்படவில்லை?; ஜெ.இ.எம்- இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக பல உளவுத்தகவல்கள் வந்த பின்பும் அந்தச் சாலையில் செல்ல வீரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?; டி.எஸ்.பி தேவேந்திர சிங் இன்று எங்கிருக்கிறார்?' உள்ளிட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.

சத்யபால் மாலிக்

இது மோடி அரசின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மையின் விளைவால் நிகழ்ந்திருக்கிறது. மாலிக் சாதாரண நபர் அல்ல. 2019-ம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்திருக்கிறார். ஏற்கெனவே கோவா, பீகார், மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராக மோடி அரசால் நியமிக்கப்பட்டவர். இதன் மூலம் மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்

எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இது தேசத்துரோகம் இல்லையா... சத்யபால் மாலிக் பொய் சொல்கிறார் என்றால், பிரதமர் அவர்மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். அதற்குப் பதிலாக சி.பி.ஐ மூலம் சம்மன் அனுப்பி மிரட்ட முயல்கிறது மோடி அரசாங்கம். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் நீடிக்க மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது. பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ராஜினாமா செய்யக் கோருகிறோம்" என்றார்.


மேலும் படிக்க ``எல்லோருக்கும் தேசத்துரோகச் சான்றிதழ்; புல்வாமா தாக்குதலுக்கு பதில் வேண்டும்!" - சுப்ரியா ஸ்ரீனேட்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top