'தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா; அண்ணாமலை பட்டியல் வரட்டும்!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தொடக்கவிழா நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் கலந்துகொண்டார். உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தபின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் உடன்பிறப்பாய் இணைவோம், தமிழராய் தலைநிமிர்வோம் என்ற முழக்கத்தோடு தி.மு.க புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது. நாம் கொரானா பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். மக்கள் அச்சப்பட தேவை இல்லை.

தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை ஒற்றை இலக்க எண்ணில் தான் வளர்ச்சி பெற்றிருந்தது. இப்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு 26.6 சதவீத இலக்கை எட்டி உள்ளது. சாப்ட்வேர் ஏற்றுமதி 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டி உள்ளோம். கலைஞர் ஆட்சியில் ஐ.டி. பிரிவில் புரட்சி இருந்து வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். நம்ம ஊரில், 'மாக்கான் கரைஞ்சு மழைபெய்யுமா' என ஒரு பழமொழி சொல்வார்கள். தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா என்பதுதான் அந்த பழமொழி. இதையெல்லாம் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

உறுப்பினர் படிவம் வழங்கல்

அண்ணாமலை சொன்னதுபோல பட்டியல் வரட்டும், தி.மு.க-வுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சனாதனவாதிகள் சாதியால் மக்களை பிளவுபடுத்தி மூடநம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை நம்பவைத்து கழுத்தை அறுத்தார்கள் என்பதை மக்கள் பேச தொடங்கி உள்ளனர். சனாதனத்தை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதால், அவர்கள் சனாதன ஆட்சி என்ற பேச்சை குறைத்துள்ளனர். ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பார்த்து ஊரே சிரிக்கிறது. இதனால் ராகுல்காந்தியின் பெயருக்கு உயர்வுதான் வந்துள்ளது. இந்த வழக்கில் அடிப்படையே கிடையாது. வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பீல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது" என்றார்.


மேலும் படிக்க 'தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா; அண்ணாமலை பட்டியல் வரட்டும்!' - அமைச்சர் மனோ தங்கராஜ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top