தன்மீதே ஆசிட் வீச ஆள் செட் செய்த பெண்; கடன்காரர்களை மிரட்ட பலே ஸ்கெட்ச்! - சிக்கியது எப்படி?!

0

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இவருடைய மகன் சுபாஷ் (26) இந்திய ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். வீட்டில் தனியாக இருக்கும் லதா, ஏதாவது தொழில் செய்ய நினைத்தார். லதாவின் உறவினரான முதலார் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் கிருபை தாஸ் (52) என்பவர் சித்திரங்கோடு பகுதியில் தனது கடை அருகே அரவை மில் ஏற்படுத்திக்கொடுத்தார். லதா அந்த அரவை மில்லை நடத்திவந்தார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு அரவை மில்லைப் பூட்டிவிட்டு பஸ்ஸில் வீட்டுக்குச் சென்ற லதா, உண்ணியூர்கோணம் பகுதியில் இறங்கி நடந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். அவரின் கை உள்ளிட்ட சில இடங்களில் ஆசிட் பட்டதால் வலியால் துடித்த லதாவை அந்தப் பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெண்மீது ஆசிட் வீசிய சம்பவம் குமரியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

அப்போது, உண்ணியூர்கோணம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதன் அடிப்படையில் லதாவின் உறவினரான ஜெஸ்டின் கிருபை தாஸ் அவருடைய நண்பரான ஜெஸ்டின் ராபின்சன், செங்கொடி பகுதியைச் சேர்ந்த ஷாரீன் (23), கல்லங்குழிப் பகுதியைச் சேர்ந்த அஜின் குமார் (24) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லதா தன்மீது ஆசிட் வீச ஆட்களை ஏற்பாடு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில். "வீடு கட்டியதில் லதாவுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிகிறது. கடனால் வட்டியும் அதிகரித்திருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் தனது பிரச்னையை உறவினரான ஜெஸ்டின் கிருபைதாஸிடம் கூறியிருக்கிறார் லதா. ஜெஸ்டின் கிருபைதாஸ், தன் நண்பரான செங்கொடி மச்சிவிளையைச் சேர்ந்த ராபின்சனிடம் ஐடியா கேட்டிருக்கிறார். அப்போதுதான் லதா மீது லேசாக ஆசிட் வீசிவிட்டு, கடன் கொடுத்தவர்கள்மீது பழியைப் போட்டுவிடலாம். அவர்கள் கடனைத் திருப்பிக் கேட்க மாட்டார்கள் என ஐடியா கொடுத்திருக்கிறார். ஆசிட் வீசும் சம்பவத்தைச் செயல்படுத்த மூவரும் விரிவாகத் திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

ஆசிட் வீச ஆள் ஏற்பாடு செய்த லதா

அந்தத் திட்டத்தின்படி ஆசிட் வீசுவதற்காக செங்கொடிப் பகுதியைச் சேர்ந்த ஷாரீன் (23), கல்லங்குழிப் பகுதியைச் சேர்ந்த அஜின் குமார் (24) ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளனர். ஜஸ்டின் கிருபைதாஸ், ராபின்சன் ஆகியோர் அவர்களுக்கு ஆசிட் வாங்கிக் கொடுத்ததுடன், பைக்கில் சென்று லதாவை அடையாளம் காட்டிக் கொடுத்திருக்கின்றனர். ஷாரின், அஜின்குமார் ஆகியோர் லதாமீது ஆசிட் வீசியிருக்கின்றனர். தன்மீது ஆசிட் வீச்சு நாடகம் நடத்த லதா எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க தன்மீதே ஆசிட் வீச ஆள் செட் செய்த பெண்; கடன்காரர்களை மிரட்ட பலே ஸ்கெட்ச்! - சிக்கியது எப்படி?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top