`பசியால் மட்டுமல்ல... தனிமையாலும் ஆற்றல் குறையும்’ - எச்சரிக்கிறது புதிய ஆய்வு

0

தொடர்ந்து எட்டு மணிநேரத்திற்கு சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும், இது எட்டு மணி நேரத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதற்குச் சமம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நமக்குள் சில உணர்வுகள் ஏற்படும். மேலும் உணவைத் தேடும் உணர்வும் ஏற்படும். இதையே பசி என்கிறோம். அதேபோல, ஒரு சமூக இனமாக நாம் வாழ்வதற்கு, மற்றவர்களும் தேவை. சமூகத்தொடர்பு இல்லாமல் வாழ்வது என்பது, உணர்வுப் பசியுடன் ஒப்பிடக்கூடியது. பசிக்கும்போது உணவின் மீது நாட்டம் வருவதைப் போலவே, சமூகத் தொடர்பின்றி தனிமையில் இருக்கும் போது நமது மூளையில் ஏக்கம் தூண்டப்படுகிறது. இந்த ஏக்கம் நம்மை மீண்டும் மற்றவர்களுடன் இணைக்கச் செய்கிறது.

சோர்வு

நமக்குள் இருக்கும் உணர்வு, சமூகத்தோடு இணைய வேண்டும் என்றே அதிகம் விரும்பும் என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ’சமூகத்தில் உள்ள அனைவருடனும் சுமூகமான உறவு கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவாக நாம் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. எனினும், இதன் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்கின்றனர்.

இந்தச் சூழலில், கோவிட்-19 தொற்றுப் பரவலை தொடர்ந்து அமலில் இருந்த லாக்டவுன்களின் பின்னணியில், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில், நீண்டகாலத் தனிமை மற்றும் சோர்வு ஆகியன, ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. மேலும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குறைவான ஆற்றலேயே கொண்டுள்ளனர். இதே சூழ்நிலை நீடித்தால் அது அவர்களுக்குத் தீமையாக மாறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, கோவிட் 19 ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் ஆய்வகத்தில் இருந்தவர்கள் என இருவேறு தரப்பினரை ஒப்பீடு செய்து, பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக, 30 பெண் தன்னார்வலர்கள், மூன்று தனித்தனி நாள்களில் ஆய்வகத்திற்குள் வந்தனர். சமூகத்தொடர்பு இல்லாமல் மற்றும் உணவு இல்லாமல் எட்டு மணிநேரம் செலவழித்தனர். நாள் முழுவதும் பலமுறை அவர்களுக்கு மன அழுத்தம், மனநிலை மாற்றம் மற்றும் சோர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டனர். மேலும் உடலில் ஏற்பட்ட அழுத்தத்தினால் அவர்களின் இதயத்துடிப்பு மற்றும் கார்டிசோல் அதிகமானதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்க, 2020ம் ஆண்டு வசந்த காலத்தில் ஆஸ்திரியா மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வின் அளவீடுகளுடன் இந்த முடிவுகள் ஒப்பிடப்பட்டன. இந்த ஆய்விற்காக 87 பங்கேற்பாளர்களிடம் இருந்து தரவை பெற்றுள்ளனர். அவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிநேரத்தை தனிமையில் கழித்தனர். அவர்களின் மன அழுத்தம் மற்றும் நடத்தை விளைவுகள் ஏழு நாள்களுக்கு ஒருமுறை எனப் பலமுறை அதே அளவீடுகளுடன் மதிப்பிடப்பட்டன.

தனிமை

முடிவில், ``சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் அதிகமான ஒற்றுமை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டுமே குறைந்த ஆற்றலையும், அதிக சோர்வையும் ஏற்படுத்தியது. உணவு இல்லாமல் இருப்பது ஆற்றலை இழக்கச் செய்யும், அதே நேரத்தில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதும்கூட ஆற்றலை இழக்கச் செய்யும் என்பது ஆச்சர்யமாக உள்ளது" என்று பால் ஃபோர்ப்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அனா ஸ்டிஜோவிக் கூறினார்.


மேலும் படிக்க `பசியால் மட்டுமல்ல... தனிமையாலும் ஆற்றல் குறையும்’ - எச்சரிக்கிறது புதிய ஆய்வு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top