விருதுநகர்: அரசு அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக, கூட்டணிக் கட்சியினர்? - போலீஸ் விசாரணை

0

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி தரகநேந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணித்தள பொறுப்பாளர் வேலைக்கு ஆள் நியமனம் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, இந்த வேலைத்திட்ட பொறுப்பாளர் பணிக்கு ஆள்கள் நியமிப்பதில் உள்ளூர் தி.மு.க-வின் இருதரப்பினரிடையே இருவேறு கருத்து நிலவி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆள் நியமனத்தில் தொடர் இழுபறி நீடித்து வந்துள்ளது.

வாக்குவாதம்

இந்தநிலையில், 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர்‌ இடத்திற்கு ஆள் நியமிப்பது தொடர்பாக, தி.மு.க. ஒன்றிய செயலாளர்‌ ஒருவரின் தலைமையில் ஒருதரப்பாகவும், மாற்றுக் கருத்துடையவர்கள் இன்னொரு தரப்பாகவும் iரு தரப்பும் ஆதரவாக சில மற்ற கட்சியினரும் காரியாப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு நியமன அதிகாரி அலுவலகத்தில் இல்லாததால் துணை அலுவலரான சுகப்பிரியா பணிகளை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் அங்குவந்த தி.மு.க-வை சேர்ந்த இருத்தரப்பினரும் மாறி, மாறி தங்களுக்கு சாதகமாக நடந்துக் கொள்ளவேண்டும் என்று அதிகாரி சுகப்பிரியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகமே பரபரப்புக்குள்ளானது. சிறிதுநேரத்தில் கருத்துவேறுபாடுடைய இருதரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகியுள்ளது. இந்த ஆத்திரத்தில் அதிகாரி சுகப்பிரியாவிடம், இருத்தரப்பினருமே வரிந்துக் கட்டிக்கொண்டு அநாகரிகமான வார்த்தைகளால் அவரை திட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது. இந்த களேபரங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் வாட்ஸ்அப்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், அரசு அதிகாரிகளை அநாகரிகமாக வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த கட்சி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.எம்‌. கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினரிடம் கேட்கையில், "அதிகாரி சுகப்பிரியாவிடம் அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்‌கள் மீது கொடுக்கப்படாமல் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் மீதே புகார் தரப்பட்டுள்ளது. இதுபற்றி சங்க அலுவலர்களுடன் ஆலோசித்து இயக்க ரீதியான முன்னெடுப்புக்கு வழிவகுப்போம்" என்றனர்.


மேலும் படிக்க விருதுநகர்: அரசு அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக, கூட்டணிக் கட்சியினர்? - போலீஸ் விசாரணை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top