பஞ்சாப்பில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ மரியாதை மறுப்பு! - பின்னணி என்ன?

0

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த நால்வரில் இருவர் கர்நாடக மாநிலத்தையும் மற்ற இருவர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

நடந்தது என்ன?

பதிண்டா ராணுவ நிலையம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகாலை சமயத்தில் நடந்திருக்கிறது. இது பயங்கரவாதிகளின் சதிச் செயலா என சந்தேகம் எழுந்த நிலையில், அதை பஞ்சாப் காவல்துறை மறுத்திருக்கிறது. `இது பயங்கரவாத தாக்குதல் அல்ல... துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத இருவர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது பஞ்சாப் காவல்துறை.

கமலேஷ்

விலகாத மர்மம்!

பதிண்டா ராணுவ நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ கிடங்குகளில் ஒன்று. இந்தப் பகுதிக்கு யாரோ சிலர் நுழைந்து பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி தாக்குதல் நடத்தியிருப்பதும், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே ராணுவ நிலையத்திலிருந்து `இன்சாஸ்' என்ற துப்பாக்கியும், 28 தோட்டாக்களும் காணாமல்போயிருப்பதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது. கூடுதலாக பதிண்டா ராணுவ நிலையத்தில் நால்வரைத் தாண்டி மற்றொருவரும் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்துகிடந்திருக்கிறார். எனவே இது தற்கொலையாக இருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

உயிரிழந்த தமிழர்கள்!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் விமானத்தில் கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கமலேஷின் உடல் அவரது சொந்த ஊரான வனவாசி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யக் கோரி அவருடைய உடல் எடுத்துவரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டம் 4 மணி நேரம் நீடிக்கவே, ராணுவ வாகனத்தில் வைத்து கமலேஷின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் யோகேஷின் உடலுக்கும் ராணுவ மரியாதை வழங்கப்படாததைக் கண்டித்து அவரின் உறவினர்களும் மறியல் போராட்டங்கள் நடத்தினர்.

யோகேஷ் குமார் ஜே

மறுக்கப்பட்ட ராணுவ மரியாதை!

உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷுக்கு ராணுவ மரியாதை வழங்காதது குறித்து கேள்வி எழுந்த நிலையில், “போர்க்களத்தில் உயிரிழந்தால் மட்டுமே அரசு மரியாதை வழங்கப்படும். இதை சந்தேகக மரணமாக இந்திய ராணுவம் கருதும் காரணத்தினால் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படவில்லை' என கோவை மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், `யோகேஷூக்கு ராணுவ மரியாதை வழங்கச் சொல்லி ராணுவ முகாம் அலுவலர்களிடமிருந்து எந்த தகவல்களும் வரவில்லை என்பதால், நாங்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை' என தேனி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க பஞ்சாப்பில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ மரியாதை மறுப்பு! - பின்னணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top