"பாஜக-வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது ஒரு நாடகம்" - அமைச்சர் பொன்முடி

0

அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து, சட்டமன்றத்தில் சட்டமாக்கியவர் தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் என்றும் சமூகநீதி பரப்பப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒரு சமூக நீதி மாநாட்டினை இந்திய அளவில் நடத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின். 

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர் பொன்முடி

ஆகவே, அம்பேத்கருக்கு விழா எடுக்கின்றோம் என்று சொன்னால் அது கொள்கை ரீதியான விழா. இது ஏதோ அரசியலுக்காக அல்ல. சமூதாய சீர்திருத்தத்திற்காக, சமூக நோக்கத்தோடு பாடுபட்ட அம்பேத்கர், ஆண், பெண் வேறுபாடு, சாதிய வேறுபாடுகள் மறந்து ஒன்றாக வாழ வேண்டும் எனவும் பாடுபட்டார். அதனால் தான் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழக அளவிலே இது இளைஞர்களுக்கு சென்றடையும், வரலாற்றை மறந்துவிடக்கூடாது. இன்று மத்திய அரசு என்னென்ன செய்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒரு காலத்திலே காங்கிரஸ் தலைவராக இருந்தவர், இஸ்லாமிய சகோதரர் என்பதற்காக, அவரை பற்றிய வரலாற்றையே பாட குறிப்பில் இருந்து எடுத்துவிட்டது இன்றைய மத்திய அரசு. ஆகவே, பாஜக-வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள் என்றால் அது ஒரு நாடாகம் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு உண்மையிலேயே அம்பேத்கரின் கொள்கை மீது பிடிப்பு இருக்குமேயானால்... சாதி, ஏழ்மை  அடிப்படையிலே பின்பட்டு இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்க வேண்டுமே தவிர,  பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்ததை தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். அதையெல்லாம் திருத்திக் கொண்டால் தான் உண்மையிலேயே அவர்கள் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருள். 

அமைச்சர் பொன்முடி பேட்டி

'இந்தி மொழி பிற்பட்டது, தமிழ் மொழி தான் கலாசாரத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த மொழி' என்றெல்லாம் ஆளுநர் அறிவித்திருக்கிறார். இப்போதுதான் தமிழினுடைய வரலாற்றை அவர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது. ஆகவே, முழுமையாக நமது தமிழினுடைய வரலாற்றையும், தமிழ் இனத்தினுடைய வரலாற்றையும் அவர் தெரிந்து கொண்டு... வரும் காலங்களிலே நமது முதல்வருடைய குரலுக்கு உண்மையிலேயே அவர் செவி சாய்த்து நடப்பார் என நம்புகிறோம். 'தமிழ் மொழி மீது இந்தி திணிக்கப்படாது' என்று அவர் சொல்லியிருப்பது நமது தமிழக முதலமைச்சரின் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற வெற்றி என்றுதான் கருதுகிறேன். அந்த வகையிலே அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன்" என்றார்.


மேலும் படிக்க "பாஜக-வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது ஒரு நாடகம்" - அமைச்சர் பொன்முடி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top