"நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!"- டெய்சி சரண்

0
சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றியதால், பாதிப்பு ஏற்பட்டதாக இரண்டு பேர் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஷர்மிகா. இதுகுறித்து ஷர்மிகா விளக்கம் எதுவும் அளிக்காததால் பா.ஜ.க-விலுள்ள ஷர்மிகாவின் தாயார் டாக்டர் டெய்சி சரணைத் தொடர்புகொண்டு பேசினேன்.

"ஷர்மிகா மீது இரண்டு பேர் புகார் அளித்துள்ளது குறித்து எங்களுக்கு இன்னும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதற்கு முறைப்படி பதிலளிப்போம். அதேநேரம், ஷர்மிகா மீது இப்படிப் புகார் அளிப்பதை அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன். இதனை ஓர் அரசியல் விளையாட்டாகவே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

டெய்சி சரண், ஷர்மிகா

நான் பா.ஜ.கவில் இருப்பதால்தான் எனது மகளைப் பழிவாங்குகிறார்கள். பா.ஜ.க-வின் சிறுபான்மை அணியைச் சிறப்பாகக் கொண்டு செல்கிறேன். எண்ணற்ற கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதைப் பொறுத்துக்கொள்ளாமல் இப்படியெல்லாம் பழிவாங்குகிறார்கள். சிறுபான்மையினரின் ஓட்டுகளை தி.மு.க மட்டுமே வாங்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், நாங்கள் சிறுபான்மை அணியை வழிநடத்துகிறோம் என்பதற்காகவே எனது குடும்பத்தைப் பழிவாங்குவது முறையான செயல் அல்ல.

மேலும், சித்த மருத்துவத்திலிருந்து எந்த மருத்துவர் வந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினாலும் மற்ற மருத்துவர்கள், அவர்களைக் கட்டம் கட்டி ஜெயிலில் தள்ளி முடக்குகிறார்கள், பழிவாங்கி அவமானப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவர்கள் கொஞ்சம் தலைநிமிர்த்தி பேசிவிட்டாலே ரவுண்டு கட்டி அடிப்பது காலங்காலமாக நடக்கிறது. ஒரு சித்த மருத்துவர் இவ்வளவு பிரபலமாவதை அவர்கள் விரும்பவில்லை. அலோபதி மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், சித்த மருத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாக ஷர்மிகா செயல்படுவதால், பல வகைகளிலும் அவர்மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஷர்மிகா சரண்

ஷர்மிகா மீது இரண்டு பேர் ரகசியமாகப் புகார் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஷர்மிகா சொல்லும் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றி நோய்கள் குணமடைந்து ஆரோக்கியமுடன் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் வீடியோக்களையும் பதிவுகளையும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் எங்களால் காட்டமுடியும். கட்டாயம் இது பழிவாங்கும் நடவடிக்கைதான்.

இப்படிச் செய்வதற்குச் சித்த மருத்துவ கவுன்சிலுக்கு எங்கிருந்து பிரஷர் வருகிறது என்பது தெரியவில்லை. எங்கள்மீது எத்தனை அவதூறுகள் வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், கடவுள் எங்களைக் கைவிடமாட்டார் என்று நம்புகிறோம். சித்த மருத்துவத்துக்கு எதிராகவே நடக்கும் போர் இது" என்று வருத்தமுடன் பேசுபவரிடம், "உங்கள் கட்சியில் இந்த நடவடிக்கைகளுக்கு என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டபோது, "எங்கள் கட்சியில் தனிப்பட்ட விஷயங்களுக்குத் தலையிட மாட்டார்கள். நாங்களும் உதவி என்று கேட்கமாட்டோம். பொது மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் குடும்பப் பிரச்னைக்குக் கட்சியின் ஆதரவைக் கேட்பதில்லை" என்கிறார்.


மேலும் படிக்க "நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!"- டெய்சி சரண்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top