நண்டு சூப், இறால் வடை, மீன் புட்டு... வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் வித்தியாச அசைவ விருந்து!

0

வீக் எண்ட் என்றாலே விருந்து... விருந்து என்றாலே அசைவம் என்றாகிவிட்ட நிலையில், இந்த வார வீக் எண்டை காரசாரமாக, வித்தியாசமான அசைவ உணவுகளோடு அமர்க்களப்படுத்த தயாரா?

நண்டு சூப்

தேவையானவை:

நண்டு - ஒரு கிலோ

எண்ணெய் - 100 மில்லி

முழு தனியா - 150 கிராம்

பூண்டு - 50 கிராம்

பட்டை - 5 கிராம்

ஏலக்காய் - 5 கிராம்

கறிவேப்பிலை - 5 கிராம்

பச்சை மிளகாய் - 10

வெங்காயம் 150 கிராம்

இஞ்சி - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பழவேற்காடு மசாலா (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது) - 100 கிராம்

கொத்தமல்லித் தண்டு - 100 கிராம்

மிளகுத்தூள் - 30 கிராம்

கொத்தமல்லித்தழை - 30 கிராம்

உப்பு - தேவையான அளவு

நண்டு சூப்

செய்முறை:

இஞ்சி, பூண்டு இவற்றை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி முழு தனியா போட்டு நன்கு வதக்கவும். பின்னர் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன்பின் பழவேற்காடு மசாலாவையும் சேர்த்துக்கொள்ளவும். கழுவி இருக்கும் நண்டுகளை இதில் சேர்க்கவும். கொத்தமல்லித் தண்டு சேர்த்துக்கொள்ளவும். தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். கொதித்த பின் இதை வடிகட்டி சூப் மட்டும் தனியான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூளை இதன் மேல் சேர்த்துக்கொண்டால் நண்டு சூப் ரெடி.

இறால் வடை

தேவையானவை:

சின்ன இறால் - ஒரு கிலோ

நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்

இஞ்சி - 10 கிராம்

பூண்டு - 50 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் 10 கிராம்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 5 கிராம்

மஞ்சள்தூள் - 10 கிராம்

சோம்பு - 5 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

பொட்டுக்கடலை - 150 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 100 மில்லி

சுட்டு எடுக்க:

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கிய பின் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, பின் கழுவிவைத்திருக்கும் இறால் மீன்களைப் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் இதை இறக்கி வைத்துவிட்டு பொட்டுக்கடலையை பவுடராக்கி இத்துடன் சேர்க்கவும். வடைக்குத் தேவையான மாவு போல் இதை நன்கு பிசையவும். மாவை சூடான எண்ணெயில் வடைகளாகப் போட்டு சுட்டெடுத்தால் இறால் வடை தயார்.

கானங்கத்த மீன் புட்டு

தேவையானவை:

கானங்கத்த மீன் - ஒரு கிலோ

துருவிய தேங்காய் - 200 கிராம்

வெங்காயம் - 400 கிராம்

பச்சை மிளகாய் - 10

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 100 கிராம்

மிளகுத்தூள் - 100 கிராம்

சீரகத்தூள் - 50 கிராம்

மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 150 மில்லி

கானங்கத்த மீன் புட்டு

செய்முறை:

முழு மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு போட்டு சூடான நீரில் கொதிக்கவைக்கவும். பின்னர் மீனிலிருந்து முள்ளை எடுத்துவிட்டு சதையை மட்டும் எடுத்து நன்கு பிசையவும். முள்ளில்லாத மீனின் சதைப் பகுதியை நன்கு பிழிந்து எடுத்து நீர் இல்லாதவாறு செய்து கொள்ளவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு மற்றும் மீனின் சதைப்பகுதி ஆகியவற்றை நன்கு பிசைந்து கலவை போல் வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பின் மீது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி இந்த பிசைந்த கலவையை போட்டு நன்கு வதக்கவும். துருவிய தேங்காயை மேல் தூவவும். 10-15 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் நன்கு வதங்கிய பின் உப்பு சரி பார்த்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி கீழே இறக்கிவைத்தால், கானங்கத்த மீன் புட்டு தயார்.

கிழங்கா வறுவல்

தேவையானவை:

கிழங்கா மீன் - ஒரு கிலோ

எலுமிச்சைப்பழம் - 3

இஞ்சி, பூண்டு - தலா 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)

பழவேற்காடு மசாலா - 100 கிராம்

எண்ணெய் - ஒரு லிட்டர்

உப்பு - தேவையான அளவு

கிழங்கா வறுவல்

செய்முறை:

கிழங்கா மீனில் ஏற்கெனவே அரைத்து வைத்த பழவேற்காடு மசாலாவைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து மீன் மேலே ஊற்றவும். அரை மணி நேரம் மீனை அப்படியே பாத்திரத்தில் ஊறவைக்கவும். பின்னர் எண்ணெயில் வறுத்தெடுத்தால் கிழங்கா வறுவல் ரெடி.

பழவேற்காடு மசாலா

தேவையானவை:

குண்டு மிளகாய் - ஒன்றரை கிலோ

மல்லி (தனியா) - ஒன்றரை கிலோ

மிளகு - 150 கிராம்

சீரகம் - 150 கிராம்

துவரம்பருப்பு - 200 கிராம்

கடலைப்பருப்பு - 150 கிராம்

புழுங்கலரிசி - 30 கிராம்

கட்டிப் பெருங்காயம் - 100 கிராம்

சுக்கு - 100 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

கிழங்கு மஞ்சள் - 150 கிராம்

கடுகு - 10 கிராம்

வெந்தயம் - 20 கிராம்

சுக்கு - 100 கிராம்

பழவேற்காடு மசாலா

செய்முறை:

மிளகாய், தனியா, மஞ்சள், சுக்கு இவற்றை தவிர மற்றவை அனைத்தையும் வறுத்து எடுத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய் ஆகியவற்றை மாவு மில்லில் அரைத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள், சுக்கு இடித்து வைத்துக்கொண்டு மசாலாவை உருவாக்க வேண்டும். இதுதான் பழவேற்காடு மசாலா.


மேலும் படிக்க நண்டு சூப், இறால் வடை, மீன் புட்டு... வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் வித்தியாச அசைவ விருந்து!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top