`ஷிண்டே தற்காலிக முதல்வர்தான்; கவனத்துடன் இருக்கவேண்டும்!' - பட்னாவிஸ் மனைவிக்கு ராஜ் தாக்கரே பதில்

0

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திடீரேன அதிர்ஷ்டம் அடித்தது போன்று கடந்த ஆண்டு முதல்வராகிவிட்டார். கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.க-வின் துணையோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். தற்போது ஏக்நாத் ஷிண்டே எந்நேரமும் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பா.ஜ.க-வில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அவர் கணிசமான எம்.எல்.ஏ-க்களுடன் வந்தால், அவருக்கு முதல்வர் பதவி கொடுப்பது குறித்து பா.ஜ.க-வும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே அரசு எந்நேரமும் கவிழும் என்று சிவசேனா (உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த அரசியல் பிரச்னைகள் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயிடம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், மராத்தி நடிகரும் எம்.பி-யுமான அமோல் கோலே ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இதில் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராஜ் தாக்கரே, ``தற்போது இருக்கும் முதல்வர் பதவி ஏக்நாத் ஷிண்டேயிக்கு தற்காலிகமானதுதான். எனவே அவர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம்" என்றார்.

உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே குறித்து கேட்டதற்கு, ``அவர்கள் சுயநலமாக இருக்கின்றனர்" என்று தெரிவித்தார். `நீங்கள் சிவசேனா தலைவராக இருந்திருந்தால், எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகவிட்டிருப்பீர்களா?' என்று கேட்டதற்கு, ராஜ் தாக்கரே பதிலளிக்க மறுத்துவிட்டார். அஜித் பவார் குறித்து கேட்டதற்கு, ``அவர் தன்னுடைய சித்தப்பா சரத் பவாரிடம் கவனத்தை செலுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.

சரத் பவார்

``2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்தபோது மத்திய அரசின் கவனக்குறைவால்தான் நடந்தது என்று நான் சொன்னதை கேட்டு மக்கள் சிரித்தார்கள். ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் அதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்" என்று மற்றொரு கேள்விக்கு ராஜ் தாக்கரே பதிலளித்தார். இதற்கிடையே சரத் பவார் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், ``சரியான நேரத்தில் கட்சியில் புதிய தலைமை உருவாக்கப்படும்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க `ஷிண்டே தற்காலிக முதல்வர்தான்; கவனத்துடன் இருக்கவேண்டும்!' - பட்னாவிஸ் மனைவிக்கு ராஜ் தாக்கரே பதில்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top