பிரித்து முதலீடு செய்வதே சரியான அணுகுமுறை..!

0

நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது; முடிந்தவரை அதை வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பதன்மூலம் நல்ல லாபம் அடைய முடியும் என்பது பெஞ்சமின் கிரகாம், வாரன் பஃபெட் உள்ளிட்ட பல முதலீட்டு ஜாம்பவான்கள் கற்றுத் தரும் பாலபாடம். இந்தப் பாடத்தின்படி தான் நாம் நடக்கிறோமா என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

காரணம், அதிகம் வருமானம் அல்லது லாபம் எங்கு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் நம்மிடம் இருக்கும் எல்லாப் பணத்தையும் கொண்டுபோய் போட்டு விடுவது என்பதை ஒரு பழக்கமாகவே நாம் வைத்திருக்கிறோம். இதற்கு நல்லதோர் உதாரணம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் கடந்த ஓராண்டுக் காலத்தில் குவிந்திருக்கும் தொகை.

நமக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ஜனவரி வரையில் வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்துள்ள பணம் ரூ.186.2 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2022-23-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.12.2 லட்சம் கோடி வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்துள்ளது. இது ஜனவரி 13-ம் தேதி வரையிலான புள்ளிவிவரம் மட்டுமே. முழு நிதி ஆண்டுக்கும் அதாவது, மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்திருக்கும் மொத்தத் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் சில நாள்களில் வெளியாகும். அந்தத் தொகை நாம் ஆச்சர்யப்படும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்!

தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், அதை மேலும் மேலும் வாங்கி, தம்மிடம் இருக்கிற எல்லாப் பணத்தையும் தங்கத்திலேயே போடுகிறார்கள் பலர். வீடு, மனை போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளையும் அடுத்தடுத்து வாங்குகிறார்கள் இன்னும் சிலர். ‘பங்குச் சந்தை தவிர வேறு எதிலும் பணம் போட மாட்டேன்’ என்று சொல்லி, அதை மட்டுமே திரும்பத் திரும்ப சுற்றி வருபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

நமது இந்த அணுகுமுறையால் என்ன நடக்கிறது? விலை உயரும்போது, அபரிமிதமான லாபம் கிடைக்கிறது. ஆனால், விலை குறையும்போது, குறைந்த அளவு லாபமோ, சில சமயங்களில் நஷ்டமோகூட கிடைக்கிறது. இதற்குப் பதிலாக, நமது மொத்த முதலீட்டையும் பகுதி, பகுதியாகப் பிரித்து, பங்குச் சந்தையில் இவ்வளவு, தங்கத்தில் இவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் இவ்வளவு என ‘சொத்து ஒதுக்கீடு’ (Asset Allocation) முறையில் முதலீடு செய்தால், அபாரமான லாபம் நமக்குக் கிடைக்காவிட்டாலும், சராசரியான லாபம் நமக்கு நிச்சயம் கிடைக்கவே செய்யும். அவ்வப்போது ‘சொத்து ஒதுக்கீடு’ முறையின்படி முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டிலும் சிக்காமல், எல்லா வகையான முதலீடுகள் மூலமும் கிடைக்கும் சிறந்த லாபத்தை நம்மால் பெற முடியும்!

எளிய வழியில் சிறப்பான லாபம் சம்பாதிக்கும் இந்த வழியை முதலீட்டாளர்கள் அனைவரும் இனியாவது பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க பிரித்து முதலீடு செய்வதே சரியான அணுகுமுறை..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top