நெருக்கும் சிபிஐ; சிசோடியாவைத் தொடர்ந்து குறி... கைதுசெய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

0

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அவர், டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி அரசில் கல்வி உட்பட பல முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். கெஜ்ரிவாலுக்கு வலதுகரமாக இருந்துவந்த அவர், டெல்லியில் பள்ளிக்கல்வியில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். சிபிஐ கைதுசெய்ததால், துணை முதல்வர் பதவியையும், அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

மணீஷ் சிசோடியா

இதே வழக்கில், தெலங்கானா முதல்வரின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு, தற்போது டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவ்வப்போது விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் பல மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கில் அடுத்த குறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான். கலால் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக சிபிஐ தலைமையகத்தில் ஏப்ரல் 16-ம் தேதி (இன்று காலை) 11 மணிக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதை டெல்லி முதல்வர் அலுவலகம் உறுதிசெய்திருப்பதுடன், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்தத் தகவல் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கவிதா

கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி கண்டித்திருக்கிறது. கெஜ்ரிவால் ஏன் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங் கூறியிருக்கிறார். “தொழிலதிபர் கௌதம் அதானி விவகாரம் குறித்து சமீபத்தில் டெல்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவால் பேசினார். மத்திய அரசின் அடுத்த இலக்கு நீங்கள்தான் என்று அப்போதே கெஜ்ரிவாலிடம் நான் கூறினேன். பா.ஜ.க அரசு ஊழலில் ஊறித்திளைக்கிறது. இதுபோன்ற நோட்டீஸ்களால் ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் போராட்டத்தை முடக்க முடியாது. கெஜ்ரிவாலைக் கைதுசெய்வதற்கான சதிதான் இந்த சம்மன். இந்த சம்மனை வைத்து கெஜ்ரிவாலையோ, ஆம் ஆத்மி கட்சியையோ ஒடுக்கிவிட முடியாது” என்றார் சஞ்சய் சிங்.

கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார் என்று பா.ஜ.க-வினரே வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். டெல்லி பா.ஜ.க தலைவரான வீரேந்திர சச்தேவா, “கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்த ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரிகிறது. கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் சிறையில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

இன்றைக்கு பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்க்கக் கூடிய கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்த நிலையில், அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக அங்கு இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால்.

அதேபோல பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் உச்சத்தில் இருந்த காரணத்தால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டியது. ஆனால், அங்கு ஆம் ஆத்மி வெற்றிபெற்று பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு முக்கியப் போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சி மாறியது. அதேபோல, இதற்கு முன்பு நடைபெற்ற இமாச்சலப் பிரதேசம், கோவா உட்பட பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரப்பிரசாரம் மேற்கொண்டார் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி

மேலும், பா.ஜ.க-வை எதிர்க்கும் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துவந்தார். இதனால், தேசிய அரசியலில் பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய முடியாத நிலை நீடித்துவந்தது. ஆனால், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததற்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். அது, ஆம் ஆத்மியின் அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது. அதேபோல, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக கெஜ்ரால் குரல் கொடுத்தார்.

இந்தச் சூழலில், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சியையே காட்டுகிறது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக கெஜ்ரிவால் மாறிவரும் சூழலில், அவருக்கு எதிராக மத்திய அரசு சதிவலை பின்னுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை, மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரளுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்பு இருக்கிறது.


மேலும் படிக்க நெருக்கும் சிபிஐ; சிசோடியாவைத் தொடர்ந்து குறி... கைதுசெய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top