தமிழ்நாட்டில் தொடர்ந்து சிக்கும் கள்ளச்சாராயம்... மீண்டும் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகிறதா?

0

தமிழகத்தில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் காட்டாறு போல் ஓடியது. அதிக போதைக்காக பேட்டரி உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் கலக்கப்பட்டன. இதை குடித்த பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் நடுரோட்டில் நின்றனர்.

கள்ளச்சாராயம்

இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த தொழில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக 1991-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, "தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அதிரடியாக அறிவித்தார்.

ஜெயலலிதா - சென்னை உயர் நீதிமன்றம்

பின்னர் அரசே மது விற்பனையில் ஈடுபட ஆரம்பித்தது. இதுபோன்ற காரணங்களினால் பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறைந்தது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் போலீஸாரை உரிய முறையில் கவனித்து விட்டு கள்ளச்சாராய மாஃபியாக்கள் தங்களது வேலையை வழக்கம் போல் செய்து வந்தனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

அவ்வப்போது அவர்கள் மீது கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் தான் உலக நாடுகளை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அரசின் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

தமிழக காவல் துறை

அப்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்ததாக புகார் எழுந்தது. பின்னர் இயல்புநிலை திரும்பியதும் கள்ளச்சாராய கும்பல் அடக்கிவாசித்தது. இந்நிலையில் மீண்டும் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இது சமீபத்தில் போலீஸார் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.

சின்னசேலம் பகுதியில் கடந்த 2-ம் தேதி போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தகரை, நாககுப்பம் காட்டுகொட்டாய் பகுதியில் லாரி டியூப்புகளில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கள்ளச்சாராயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர் வனப்பகுதி இருக்கிறது. இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி என பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 23-ம் தேதி போலீஸார் சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது சாராயம் விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த கள்ளச்சாராயங்கள், ஊறல்கள், வெளிமாநில மது பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

ஊறல்கள்

மேலும் சாராய விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கள்ளச்சாராயம் விநியோகம் அமோகமாக நடந்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 25-ம் தேதி ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, ஈசானிய ஓடை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லாரி டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

அருள்குமார்

இவ்வாறு தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் தொடர்பாக வரும் செய்திகள் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்யும் வகையில் இருக்கிறது.மீண்டும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் அருள்குமார், "கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அங்கு வாழும் மக்களின் வருமானம் குறைந்து வருகிறது.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளின் மதுபானங்களின் விலையை கடுமையாக உயர்த்தினார்கள். இதன்காரணமாக சாதாரண வகை மதுவை குடிக்க வேண்டும் என்றால் கூட ரூ.200 செலவாகிறது.

கள்ளச்சாராயம்

ஏற்கெனவே பணம் இல்லாமல் திண்டாடி வரும் குடிமகன்களுக்கு இது மேலும் சிக்கலை கொடுத்திருக்கிறது. மேலும் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு அருகில் டாஸ்மாக் கிடையாது. எனவே வாகனத்தில் வந்து தான் குடிக்க வேண்டும்.

பெட்ரோல் விலையும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களினால் தான் கள்ளச்சாராய கடைகளை நோக்கி செல்கிறார்கள். அங்கு ரூ.100ல் குடித்து விடலாம். பல இடங்களில் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருக்கிறார்கள்" என்றார். ``பெரும் உயிரிழப்புகளை தடுக்க அரசு இது போன்ற கள்ளச்சாராய கும்பலை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


மேலும் படிக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து சிக்கும் கள்ளச்சாராயம்... மீண்டும் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகிறதா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top