அதிமுக ஆட்சியில் ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட நிதி... பிரச்னையை கிளப்பிய பிடிஆர் - பின்னணி என்ன?!

0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சய பாத்திரம் என்ற திட்டமாக அ.தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ``ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 ஆண்டு வரை ரூ.50 லட்சம் பணம் discretionary fund (விருப்ப நிதி) ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 2019-ம் ஆண்டுக்கு பிறகு திடீரென்று 50 லட்சத்தில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் (Discretionary power) என்ற பிரிவில் ரூ. 5 கோடியாக மாற்றப்பட்டுள்ளது. அந்த கணக்கு குறித்து ஆய்வு செய்ததில், ரூ. 5 கோடி பணத்தில் ரூ.4 கோடி அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அட்சயபாத்திர திட்டம் துவக்க விழா

இந்த அமைப்பு வழங்கிய உணவு சத்துணவு கூட இல்லை. அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்து கொடுத்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆளுநர் மாளிகையின் கண்ணுக்கு தெரியாதகணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் தான் அட்சய பாத்திர திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.4 கோடி வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது.

ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தலைப்பில் பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணம் ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்று அச்சம் வருகிறது. அதோடு, திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதியில் மற்ற கணக்கிற்கு மாற்றுவது சரியல்ல என சி.ஏ.ஜி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இதுபோல நடந்துள்ளது. ரூ. 5 கோடி எந்த காரணம் இல்லாமல், யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக ஒரு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது ஜனநாயக மரபுக்கு நல்லது கிடையாது. இது நல்ல திட்டமே இல்லை. ரூ.500க்கும் ரூ.1000க்கும் மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் நாம் ஒப்புதல் பெற்று வருகிறோம். ஆனால் ரூ. 5 கோடி யாருக்கும் சொல்லாமல் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா?" என கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “பள்ளி மாணவர்களுக்காக ஓர் அற்புதமான திட்டமாக காலை உணவு திட்டம் ‘அட்சயபாத்திரம்' என்கிற பெயரில், ஒரு தனியார் அமைப்பு மூலமாக தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கான இந்த புதுமையான திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமை. அதற்காக ரூ.5 கோடி கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது. இந்த உன்னதமான திட்டத்தை தொடங்கி வைக்க ஆளுநர் வந்திருந்த போது நானும் சென்றிருந்தேன். சென்றிருந்ததோடு மட்டுமில்லாமல், நானும் என் மகன் ஜெயவர்த்தனனும் எங்களின் ஒரு மாத சம்பளத்தை இந்த திட்டத்துக்காக் கொடுத்திருந்தோம்.

ஜெயக்குமார்

பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வந்த பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இப்படி இருக்கும்போது, இப்போதைய தி.மு.க அரசும் இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதை நாங்கள் தான் முதலில் கொண்டு வந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ள முடியாது அவர்காளால். எனவே அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த சிறப்பான திட்டத்தை லேபிள் ஒட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க, காழ்புணர்ச்சியினால் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்” என்றார்.


மேலும் படிக்க அதிமுக ஆட்சியில் ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட நிதி... பிரச்னையை கிளப்பிய பிடிஆர் - பின்னணி என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top