``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்’’ - ராகுல் காந்தி, கார்கேயை சந்தித்த சரத் பவார்

0

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் எடுத்திருக்கின்றனர். ஆனால் சரத் பவாரை தவிர்த்து ஒவ்வொருவரும் காங்கிரஸ், பா.ஜ.க. இல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயன்றனர்.

இதனால் இந்த முயற்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து, வரும் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ராகுல் காந்தி

அதோடு எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது குறித்தும் விவாதித்தனர். நிதீஷ் குமார் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.அவர்களை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது மூன்று தலைவர்களும் மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சரத் பவார், ``நான் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச விரும்புகிறேன். மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்தித்து பேசுவேன். அனைவரையும் சேர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வோம்’’ என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ``மும்பையிலிருந்து வந்து எங்களைச் சந்தித்து எங்களுக்கு சரத் பவார் வழிகாட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினர். நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருப்போம். நாடு, சுதந்திரம், அரசியலமைப்பு, பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசு ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும், ஒன்றாக நின்று போராட தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி இது குறித்து, ``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக கார்கேயும், சரத் பவாரும் சொன்னார்கள். இது தொடக்கம் தான். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

சரத் பவார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி எதிர்பார்த்ததை விட விரைவாக நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். அதோடு விரைவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றை கூட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வருவார்களா என்று தெரியவில்லை. இவர்கள் மூன்று பேரும் தங்களை எதிர்க்கட்சி கூட்டணிகளின் தலைவர்களாக முன்னிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் எந்தப்பக்கமும் சேராமல் இருக்கின்றனர்.


மேலும் படிக்க ``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்’’ - ராகுல் காந்தி, கார்கேயை சந்தித்த சரத் பவார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top