`சர்ச்சையில் சார்லஸ் முடிசூட்டு விழா!’ - மன்னராட்சிக்கு எதிராக திரளப்போகிறார்களா இங்கிலாந்து மக்கள்?

0

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அந்த நாட்டின் புதிய மன்னராக அரியணை ஏறினார் மூன்றாம் சார்லஸ். புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு எதிராகவும், மன்னராட்சிக்கு எதிராகவும் இங்கிலாந்தின் பல்வேறுபகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சூழ்நிலையில், நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்துவந்த மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு போராட்டகளத்திலுள்ள இங்கிலாந்து மக்களை மேலும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

ராணி எலிசபெத்- மன்னர் சார்லஸ்

புதிய மன்னர் சார்லஸ்; வெடித்த போராட்டம்:

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் கோலோச்சிய இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் காலமானார். ராணியின் மறைவைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். அப்போதே சார்லஸ் மன்னராவதற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. குறிப்பாக, மகாராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், `சார்லஸ்தான் புதிய மன்னர்’ என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, `யார் அவரைத் தேர்வு செய்தது?’ என்று சத்தமாக ஒருவர் கேள்வியெழுப்பினார். அதையடுத்து அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார் மூன்றாம் சார்லஸ்.

ஆனால் அவர் பொறுப்பேற்ற அடுத்தநாளே `Not My King' (அவர் எங்கள் மன்னர் அல்ல) என்ற பதாகைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். `இத்தனை ஆண்டுகள் கழித்தும், இந்த நூற்றாண்டிலும்கூட மன்னராட்சியா?' என வெகுண்டெழுந்து முடியாட்சிக்கு எதிராக இங்கிலாந்து மக்கள் எழுப்பிய #NotMyKing என்ற கோஷம் வீதிகளையும், ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களையும் தீயாய் ஆக்கிரமித்தன. தொடர்ந்து, மூன்றாம் சார்லஸ் செல்லும் இடங்களிளெல்லாம் எதிர்ப்பு பதாகைகளே காண்பிக்கப்பட்டன. சார்லஸ் மக்களை சந்திக்கச்செல்லும் போதெல்லாம் அவர்மீது முட்டைகள் வீசப்பட்டன. இப்படி எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களையெல்லாம் இங்கிலாந்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்தது.

நாட் மை கிங்

அதிகாரப்பூர்வ முடிசூட்டுவிழா; அரண்மனை அறிவிப்பு:

மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டாலும், அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்துவந்தது. இந்த நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது. இந்த முடிசூட்டு விழா இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலுள்ள அப்பே தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது. சார்லஸின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பர்யமாக பயன்படுத்திவந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ்

மேலும், இந்த முடிசூட்டு விழாவின்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த அரியணையில் அமர்வார். அதைத்தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப் படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கடுவார். அதன்பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு சூட்டப்படும். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்துகொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அந்த தினமே, மன்னர் சார்லஸின் மனைவியான கமிலா வும்இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

கோலாகல கொண்டாட்டம்; உலகத் தலைவர்களுக்கு அழைப்பு:

மன்னர் மூன்றாம் சார்லளின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அவரின் மகன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசரின் மனைவி கேட், மற்றொரு இளவரசர் ஹாரி-மேகன் மார்கலே தம்பதியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, கோலாகலமாக நடைபெறவிருக்கும் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள சுமார் 2000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு பெருமை, கௌரவம் சேர்க்கும் விதமாக மே 8-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்

ஒருபக்கம் கோலாகலமாக மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு அரண்மனை தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், முடியாட்சிக்கு எதிராக மக்களும் போராட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க `சர்ச்சையில் சார்லஸ் முடிசூட்டு விழா!’ - மன்னராட்சிக்கு எதிராக திரளப்போகிறார்களா இங்கிலாந்து மக்கள்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top