DMK: பி.டி.ஆர் ஆடியோ லீக்ஸ்... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?!

0

2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் பல தரப்பினரின் நன்மதிப்பை தி.மு.க அரசு பெற்றிருக்கிறது. கருணாநிதியைவிட சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிற பாராட்டை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக சில சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் தி.மு.க அரசு சந்தித்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதியளிக்கும் அரசாணை போன்ற நடவடிக்கைகளால் தி.மு.க அரசின் செல்வாக்கு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. `எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்... தி.மு.க ஆட்சி மலர வேண்டும்' என்று சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் யார் யாரெல்லாம் சட்டமன்றத் தேர்தலின்போது, குரல் கொடுத்தார்களோ, அவர்களே கண்டிக்கிற அளவுக்கு தி.மு.க அரசின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பி.டி.ஆர் குறித்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாயை முறைகேடாகச் சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் ஆடியோ க்ளிப், தி.மு.க தலைமைக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதற்கடுத்து, மற்றொரு ஆடியோ க்ளிப் ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்துவருகிறேன். பா.ஜ.க-விடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா. ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா... அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்.

அதனால் எட்டு மாதங்கள் பார்த்த பிறகு முடிவுசெய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்த அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினையாகத் திருப்பியடிக்கும். எப்படி சொல்வது... நான் இந்த யுத்தத்தை சீக்கிரமாகக் கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அந்தக் குரல் பேசுகிறது. அதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்று அண்ணாமலை கூறுகிறார்.

உதயநிதி

இது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கும் பி.டி.ஆர்., நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற போலி காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டுவருகிறார்.

தன் அரசு பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் தனது ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசியிருப்பதாக வெளியாகியிருக்கும் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார். அதேபோல, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருகன் சபரீசனும் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

ஸ்டாலின்

ஆமாம் என்றாலும் பிரச்னை... இல்லை என்றாலும் பிரச்னை. அதனால்தான், மௌனமாகக் கடந்துவிடலாம் என்று முதல்வர் நினைக்கலாம். ஆனால், இது அவ்வாறு கடந்துபோகிற விவகாரம் அல்ல. ஆகவேதான், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆடியோ க்ளிப் இரண்டு பாகங்களுடன் நின்றுவிடும் என்று தெரியவில்லை. அண்ணாமலை அடுத்து வெளியிடக்கூடிய ஆடியோவில் இன்னும் சீரியஸான விவகாரங்கள் பேசப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். அப்போதும் தி.மு.க தலைமை மௌனத்தையே கடைப்பிடிக்குமா?

இந்த விவகாரத்தை பா.ஜ.க-வினர் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. ஏற்கெனவே, இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஆளுநரிடம் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை, இது குறித்து ஆளுநர் ஒரு சீரியஸான முடிவை எடுக்கிறார் என்கிற பட்சத்தில், குறைந்தபட்சம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய அழுத்தம் அப்போது தி.மு.க-வுக்கு நிச்சயம் ஏற்படும்.


மேலும் படிக்க DMK: பி.டி.ஆர் ஆடியோ லீக்ஸ்... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top