Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா பப்பாளிப்பழம்?

0

Doctor Vikatan: பப்பாளிப்பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகுமா? எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

-Subra Mani, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காது. 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' என்ற விஷயம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது பழமோ, காய்கறியோ, வேறு எந்த உணவோ.... எதைச் சாப்பிட்டாலும் அடுத்த சில மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படி அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசெமிக் இண்டெக்ஸ்.

பப்பாளிப்பழத்தில் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு குறைவுதான். அதனால் 100 முதல் 120 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பது உங்கள் உணவுப்பழக்கத்தைப் பொறுத்தது.

காலை உணவுக்கு இட்லியோ, தோசையோ, உப்புமாவோ எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்துடன் பப்பாளிப்பழம் சாப்பிடுவதாக இருந்தால், ஏற்கெனவே நீங்கள் சாப்பிட்ட காலை உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இருக்கும். பப்பாளியும் சாப்பிடுவதால் கிளைசெமிக் லோடு அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம்

எப்போதுமே பழங்களை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இந்த இடைவேளைகளில் ஏற்படும் பசியைப் போக்கும்படியும் இருக்கும். பழங்களில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் அதிகம் ஏறாது. எனவே அந்த நேரமே பப்பாளி உள்பட அனைத்துப் பழங்களையும் சாப்பிட உகந்தது. நேரத்தையும் அளவையும் கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடலாம், தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா பப்பாளிப்பழம்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top