Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா?

0

Doctor Vikatan: எந்த இனிப்பும் சாப்பிடாமல் அல்லது மிகக் குறைவான அளவிலேயே உணவில் இனிப்புகளைச் சேர்த்துக்கொண்டு, தினசரி ஏதாவது ஒருவகை பழத்தைச் சாப்பிடும்பட்சத்தில், உடலுக்குத் தேவையான இனிப்புச்சத்துக் கிடைத்துவிடுமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நம் உடலில் இனிப்புச்சத்து என தனியே ஒன்று கிடையாது. நம் உடலானது முழுமையாக ஆயில் போடப்பட்ட மெஷின் போன்றது. மாவுச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு என்ன செய்யும், புரதச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வேலைகள் உள்ளன.

நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது செரிமானமாகி, கடைசியில் குளுக்கோஸாகவே மாறும். குளுக்கோஸ் இல்லாமல் மூளையால் இயங்கவே முடியாது. அதற்காக வெறும் குளுக்கோஸை வாயில் மென்றுகொண்டே இருந்தால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அர்த்தபடுத்திக் கொள்ளக்கூடாது. அதே மாதிரிதான் இனிப்புச்சத்தும். இனிப்பாகச் சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் என்று எதுவும் கிடையாது.

கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது அரிசி, கோதுமை உணவுகளில், சிறுதானியங்களில், கிழங்கில் இருக்கிறது. கார்போஹைட்ரேட் என்பது எனர்ஜி கொடுக்கும் எரிபொருள் போன்றது. புரதச்சத்தானது திசுக்களைப் பழுதுபார்க்கும். தசைகளின் கட்டுமானத்துக்கும் செல்கள் பெருகவும் உதவும். எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றில் உள்ள கொழுப்புச்சத்து ஆற்றல் செறிவூட்டப்பட்ட ஆதாரம் போன்றது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் 4 கலோரி என்றால் ஒரு கிராம் கொழுப்புச்சத்து 9 கலோரிகளாக இருக்கும்.

கொழுப்பு

நம்முடைய உடல் என்பது ஒரு பரிசோதனைக்கூடம் போன்றது. அதிக அளவு கார்போஹைட்ரேட் சாப்பிடும்போது அது கொழுப்பாக மாறி நம் இடுப்பிலோ, தொப்பையிலோ சேர்ந்துவிடும். உடலுக்கு எனர்ஜி வேண்டும் என்ற எண்ணத்தில் கார்போஹைட்ரேட்டே எடுத்துக்கொள்ளாமல் அதிக அளவு புரதமாக எடுத்துக்கொள்ளும்போது, உடலானது புரதச்சத்தையே ஆற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்.

பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறுமே இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல நாம் என்ன சாப்பிட்டாலும் அது இறுதியில் குளுக்கோஸாகத்தான் மாறப் போகிறது. உடலுக்கு என்ன சத்து தேவை என்பது சரியாகத் தெரியும்.

உணவு

எனவே உங்கள் வயது, எடை, உடல் உழைப்புக்கேற்ப அளவாக கார்போஹைட்ரேட், பழங்கள், சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டியதுதான் அவசியம். பாக்கெட் உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்... அதில் Added Sugar, Total Sugar என இரண்டு இருக்கும். இதில் Added Sugar துளியும் இல்லை என்று தெரிந்தால்தான் அதைச் சாப்பிட வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து இருக்கும். இதே விதி உப்புக்கும் பொருந்தும்.

எனவே சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் உணவில் இயற்கையாகவே உள்ள சர்க்கரைச் சத்தே உடலுக்குப் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top