Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று.... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படுமா?

0

Doctor Vikatan: என் பெற்றோருக்கு 70 ப்ளஸ் வயது. இருவரும் தனியே வசிக்கிறார்கள். கொரோனாவுக்கான 3 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள். இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு பயம் ஆரம்பித்துவிட்டது. இன்னொரு டோஸ் போட வேண்டியிருக்குமா? தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் செய்திகளைப் பார்த்து பயந்திருக்கிறார்கள். உங்கள் அட்வைஸ் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

மருத்துவர் விஜயலட்சுமி

கடந்த சில தினங்களாக சாதாரண சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்பட வேறு பாதிப்புகளோடு வரும் மக்களைப் பரிசோதிக்கும்போது அவர்களுக்கு கொரோனா தொற்றும் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி கொரோனா பாசிட்டிவ் ஆகிறவர்கள் குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை எல்லா வயதிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் யாரும் தீவிர பாதிப்புடன் வருவதில்லை.

ஒரு டோஸ் தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாதவர்களும், இணை நோய்களின் பாதிப்பு அதிகமுள்ளவர்களும்தான் அட்மிட் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மற்றபடி மூன்று டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களிடம் இந்த பாதிப்பு பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை.

இணைநோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் என 'ஹை ரிஸ்க்' பிரிவில் உள்ளவர்கள், மூன்று டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறையலாம்.

ஆனால் அதற்காக அவர்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வயதானவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு பிரச்னைகளுடன் வரும்போது டெஸ்ட்டில் கொரோனாவும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறோம். அவர்களும் நிமோனியா பாதிப்பு அளவுக்குத் தீவிர நிலையில் வருவதில்லை. இப்போதைக்கு நமக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படாது என்றே தெரிகிறது.

தடுப்பூசி

தடுப்பூசிகளே போட்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் அதிக ஆபத்தானது. மற்றபடி தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக் பாதிப்புக்கும் தொடர்பில்லை. உங்கள் பெற்றோர் மூன்று டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. வழக்கமான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே பாதுகாப்பாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று.... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top