ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். இதற்காக அவர் குஜராத் மாநிலம் சூரத்துக்கு வருகை தர இருக்கிறார். 2019 -ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி என்ற பெயர் குறித்து அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது. அது தொடர்பான வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தன்னை விதிக்கப்பட்டதும் அதனை தொடர்ந்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது!
மேலும் படிக்க Tamil News Live Today: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை - ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!