இன்ஸ்டா பழக்கம்; நைஜீரிய நபரிடம் 1.8 கோடி ரூபாயை இழந்த ஹரியானா பெண்! - என்ன நடந்தது?

0

ஹரியானவைச் சேர்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி ரூ.1.8 கோடி ஏமாற்றிய நைஜீரிய நபர் இருவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஏப்ரல் 10-ம் தேதியன்று மனேசர் காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்திருக்கிறார்.

Scam (Representational Image)

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் தன்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி என அறிமுகப்படுத்திக்கொண்டு பழக ஆரம்பித்தார். அதன் பின்னர் தொடர்ந்து பேசிவந்த அந்த நபர் கடந்த ஆண்டில் ஒருநாள், ஐபோன், நகைகள் மற்றும் பிற பொருள்கள் அடங்கிய பார்சலை அனுப்புவதாக அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு டிசம்பர் 6-ம் தேதியன்று ஒருவர், அந்தப் பெண்ணுடைய பெயரில் பார்சல் வந்திருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள ரூ.35,000 வரி செலுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் வரி செலுத்தவேண்டும் என்று கோரிய நபரால் பகிரப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த நபர், United national anti terrorist clearance மற்றும் பிற கட்டணங்கள் என்ற பெயரில் பெண்ணிடம் தொடர்ந்து பணம் கேட்டிருக்கிறார்.

இப்படியே போக இதுவொரு மோசடி என்று அந்தப் பெண் உணர்ந்த தருணத்தில் மொத்தமாக 1.8 கோடி ரூபாயை அந்த நபருக்கு அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார், டெல்லியின் நிஹால் விஹார் பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று கைதுசெய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் நைஜீரியாவைச் சேர்ந்த எபுகா பெலிக்ஸி (Ebuka Felixi), சுக்வாகா எவெரே (Chukwaka Ewere) எனத் தெரியவந்தது.

கைது

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் டெல்லியின் வெளிப்புற பகுதியில் வசித்துவந்திருக்கின்றனர். அதோடு, அவர்களிடமிருந்து காசோலை புத்தகம் (Cheque book), 16 வங்கி பாஸ்புக்குகள், 25 ஏ.டி.எம் கார்டுகள், ஏழு செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஸ்கூட்டர், 10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட பின்னர் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இது குறித்துப் பேசிய குற்றப்பிரிவு ஏ.சி.பி வருண் தஹியா, ``இருவரும் மே 11-ம் தேதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க இன்ஸ்டா பழக்கம்; நைஜீரிய நபரிடம் 1.8 கோடி ரூபாயை இழந்த ஹரியானா பெண்! - என்ன நடந்தது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top