மே 28 உலகப் பட்டினி தினம்: உணவுப் பற்றாக்குறைக்கு உண்மையான காரணம் என்ன?

0

மனிதன் உழைப்பதற்கு முக்கிய காரணம் உணவு. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு  உழைக்கும் தொழிலாளியும், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு உறங்கும் தாய்மார்களும், காலையில் காசு இல்லாமல் 2 இட்லி மட்டும் அல்லது டீ குடித்துவிட்டு  கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இங்கு ஏராளம்.

பசி

ஒரு வேளை உணவிற்காக  யாசிக்கும் கைகளை தினமும் பேருந்து நிலையங்களில், கடற்கரைகளில், தெருக்களில் பார்க்கலாம். இவர்களுடைய நிலைக்கு அவர்களா காரணமாக இருக்க முடியும்? கண்டிப்பாக இல்லை.

இங்கு இருக்க கூடிய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக கட்டமைப்பு. வருடம் வருடம் மே 28 அன்று உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.  

மக்கள் உணவின்றி தவிப்பதற்கு  போர், உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று, உணவு பங்கீட்டில்  குறைபாடு, சுரண்டல் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. போரும், சுரண்டலும், உணவு பங்கீட்டில் குறைபாடும் மனிதர்களால் ஏற்படக்கூடியது.  1943-1944  ஆண்டுகளில் உலக மக்களின் கவனத்தைப் பெற்ற பெங்கால் வறட்சியில் (Bengal Famine) லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு உணவு  பற்றாக்குறையைக் காட்டிலும் முறையான  உணவு பங்கீடு இல்லாதது தான் காரணம் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா ஷென் தெரிவித்திருந்தார்.  

வறுமை

உலகில்  பட்டினியும்  வறுமையும்  நிறைந்திருக்க காரணம்   உணவும், பொருளாதாரமும்  குறிப்பிட்ட மக்களிடம் குவிந்து கிடைப்பதே. பசியும் பட்டினியும் வளரும் நாடுகளிலே பெரும் பிரச்னையாக  உள்ளது.  2022 ஆண்டில் உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தற்போதைய ஆட்சியில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் பல இருந்தும் நடைமுறை சிக்கல்கள் ஏராளம். ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக, பசியால் தவிக்கும் ஏழை எளிய  மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், மக்களும் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை; நிர்வாகமும் சரியாக இல்லை.

பெருந்தொற்று, பேரிடர் போன்ற காலங்களில் உணவு  பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முறையான மேலாண்மை திட்டம் அரசிடம் இல்லை. கொரனா காலங்களில்  தொழில்கள்  முடங்கிய போது  எண்ணற்ற மக்கள் உணவுக்கும் பாலுக்கும் கூட காசு இல்லாமல் தவித்தனர். ஆனால் இவர்களுக்கு அரசால்  என்ன செய்ய  முடிந்தது. சிறிய நிவாரணம் மட்டுமே கொடுக்க முடிந்தது.

வறுமை

அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று கூறுவது  மக்களை ஏமாற்றும்  வேலை. அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம், பெரும்பணக்காரர்களிடம்  தேக்கி வைக்கப்பட்ட பணத்தை எல்லாருக்குமானதாக  பங்கிட்டிருந்தாலே வறுமை  ஒழிந்திருக்கும். இந்தியா பட்டினிக் குறியீட்டில் 107-வது இடத்தில் இருப்பதற்கு அரசியல்  முக்கியமான காரணமாக இருக்கலாம். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவையால் மக்களின் அடிப்படை தேவைகளே கேள்விக்குறியாக இருப்பதை  கையாள்வதற்கு தற்போதைய அரசு அரசியலை கையிலெடுக்கிறது.

மனிதனாக பிறந்த  அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம்,சுகாதாரம், கல்வி ஆகியவை சமமாக கிடைக்கும் சமூகத்திற்காக செயல்படுவதே பட்டினி தினத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.


மேலும் படிக்க மே 28 உலகப் பட்டினி தினம்: உணவுப் பற்றாக்குறைக்கு உண்மையான காரணம் என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top