போலீஸுக்கு போன்... 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த ஜோடி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செறுபுழா காவல் நிலையத்துக்கு நேற்று காலை 6 மணியளவில் ஸ்ரீஜா என்ற பெண்ப்போன் செய்து, "இன்று நீங்கள் என்னை விசாரணைக்கு அழைத்தீர்கள். நான் விசாரணைக்கு வரமாட்டேன், நானும், குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்" என கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து போலீஸார் ஸ்ரீஜாவின் வீட்டுக்கு விரைந்து. சென்றுள்ளனர். அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

இறந்த குழந்தைகள்

கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஸ்ரீஜாவும் அவரை 2 வாரங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ஷாஜி(40), மற்றும் ஸ்ரீஜாவின் மூன்று குழந்தைகளான சூரஜ்(12), சுஜித்(10), சுரபி(8) ஆகியோரும் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தனர். 3 குழந்தைகளும் மாடி படிகட்டின் ஓரத்தில் உள்ள கம்பியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. ஸ்ரீஜா மற்றும் ஷாஜி ஆகியோர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். குழந்தைகளை கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா, ஷாஜி ஆகியோர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் 5 பேர் தகொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்ரீஜா காவல் நிலையத்துக்கு போன் செய்துவிட்டு குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், "ஹோம் நர்ஸிங் வேலை செய்துவந்த ஸ்ரீஜா(35)-வுக்கும் சுனில் என்பவருடன் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் 8 மாதங்ககுக்கு முன்பு கட்டடம் கட்டும் வேலை செய்யும் ஷாஜியுடன் ஸ்ரீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கணவன் சுனிலை பிரிந்த ஸ்ரீஜா ஒரு கோயிலில் வைத்து ஷாஜி-யை கடந்த 16-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஷாஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. அதே சமயம் ஷாஜி தனது மனைவியை சட்டப்படி விவகாரத்து செய்யவில்லை, ஸ்ரீஜாவும் தனது கணவனை முறைப்படி விவகாரத்து செய்யவில்லை.

ஷாஜியை திருமணம் செய்த ஸ்ரீஜா தனது மூன்று குழந்தைகளுடன் முதல் கணவன் சுனிலுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்து வெளியேறுமாறு சுனில் பிரச்னை செய்ததுடன், மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அது சம்பந்தமாக விசாரணைக்கு ஸ்ரீஜா அழைக்கப்பட்டிருந்தார். காலையில் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து அவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அவர் போன் செய்ததும் போலீஸ் விரைந்து அங்கு சென்றும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை" என்றனர்.

ஷாஜி, ஸ்ரீஜா திருமணத்தின் போது எடுத்த போட்டோ

அதே சமயம் தனது மகள் கணவனை பிரிந்து வேறொருவருடன் வசிப்பது தனக்கு தெரியாது என ஸ்ரீஜாவின் தந்தை பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஜா-வுக்கு அவரின் முதல் கணவரான சுனிலுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் முதல் கணவனை பிரிந்துள்ளார். 8 மாதம் முன்பு பழக்கமான ஷாஜியுடன் சேர்ந்து 2 வாரங்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று குழந்தைகளின் உயிரையும் பறித்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர் ஸ்ரீஜாவும், ஷாஜியும். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க போலீஸுக்கு போன்... 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த ஜோடி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top