அரசு வேலை... சொந்த கட்சி நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி - விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது!

0

மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி சொந்தக்கட்சி உறுப்பினரிடமே ரூ.9 லட்சம் ஏமாற்றிய வழக்கில் விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன்.‌ இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவராக உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு ரெயில்வே துறையிலும், மற்றொருவருக்கு கப்பல் துறைமுகத்திலும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2017-ல் 11 லட்ச ரூபாயை பா.ஜ.க. மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷூம், செயலாளர் கலையரசன் என்பவரும் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

சுரேஷ்

ஆனால் கொடுத்த வாக்குறுதியின்படி பாண்டியன் மகன்களுக்கு மத்திய அரசு வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பாண்டியன், தனது மகனுக்கு அரசு வேலைக்கூட வாங்கித்தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தைமட்டும் என்னிடம் திருப்பிக்கொடுங்கள் என கேட்டுள்ளார். பலக்கட்ட புகார்களுக்கு பிறகு, வி.கே.சுரேஷும், கலையரசனும் சேர்ந்து 2 லட்ச ரூபாயை மட்டும் பாண்டியனுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதிப்பணம் ரூ.9 லட்சத்தை திருப்பிக்கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பா.ஜ.க.மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ் மற்றும் செயலாளராக உள்ள கலையரசன் ஆகியோர் தன்னிடம் 9 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முதற்கட்டமாக கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த வி.கே.சுரேஷ் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தை அணுகி நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் பெற்றிருந்தார். அதன்படி முன்ஜாமின் பெறுவதற்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமாக செலுத்தவேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால், இந்தத்தொகையை செலுத்தாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். இந்தநிலையில், நிபந்தனை முன்ஜாமீனுக்கு பணம் செலுத்துவதற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த கெடு தேதி காலாவதியானதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற வி.கே.சுரேஷ் முயற்சித்துள்ளார்.

கைது

ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே இந்த வழக்கில் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்துள்ளது. இந்நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் காலாவதியானதை தொடர்ந்து வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்" என தெரிவித்தனர்.


மேலும் படிக்க அரசு வேலை... சொந்த கட்சி நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி - விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top