'டாஸ்மாக் இல்லாமலேயே தமிழக அரசு இயங்கும்' - செந்தில் பாலாஜி கூறுவது சாத்தியமா?! | ஓர் அலசல்

0

சென்னை திருமங்கலத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 3-ம் தேதி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், அன்புமணி உட்பட யாராவது பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே.

செந்தில் பாலாஜி

அதற்கு அவர்களுக்கு தைரியம் கிடையாது. இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிட்டால் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

டாஸ்மாக்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "டாஸ்மாக் வருவாய் இல்லாமல் அரசை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று பிரசாரம் செய்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும், திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

ஆனால் இன்று ரூ.35,000 கோடி, ரூ.40,000 கோடி என இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்கிறார்கள். ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 4-ல் ஒரு பங்கு சாராய வருமானமாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை. எனவே தான் 500 கடைகளை மூடுவதற்கு கூட யோசிக்கிறார்கள்.

வெறும் விளம்பரத்துக்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் பேசக்கூடிய பேச்சுக்கள் தான் இது. அரசின் வருமானத்தை பெருக்குவதற்கு கிரானைட், கல் குவாரி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரித்தால் டாஸ்மாக்கை படிப்படியாக மூடலாம். ஆனால் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் தொகை தான் பெரும் உதவியாக இருக்கிறது.

துரை கருணா

ஒருவேளை திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே அமைச்சர் சொல்வது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. ஏற்கெனவே பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு குழு அமைத்திருக்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட தொடங்கினால் இன்னும் ஒரு 5-10 ஆண்டுகளின் பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியும்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றால் உடனே மூடி விடுங்கள். ஆனால் அப்படி உடனே மூடினால் வருவாய்க்கு எங்கே செல்வீர்கள். உங்களிடம் தொழில் வளர்ச்சி இல்லை. எந்த முதலீட்டையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.

வாய் சொல்லின் வீரர்கள் என்பது போல் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சு இருக்கிறது. திராணி இருந்தால், தெம்பு இருந்தால் டாஸ்மாக்கை மூடுங்கள். மது ஆலைகளின் மூலமாக அரசுக்கு வருவாய் என்பதை விட 4 மடங்கு திமுக வினருக்கு லாபம் கிடைத்து கொண்டிருக்கிறது. இவர்களுடைய வியாபாரம் கெட்டுப்போகும் என்பதால் டாஸ்மாக்கை மூடுவதற்கு சாத்தியம் இல்லை" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "அமைச்சர் இன்று மூடுகிறேன் என்று சொல்லவில்லை. 3, 4 ஆண்டுகளுக்கு நமது பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும். அதன் பிறகு முழுவதுமாக மூடி விடலாம். டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடிக்கு போட்டிருக்கிறோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எனவே மது விற்பனை மூலம் கிடைப்பது 10% தான். எனவே ரூ.30,000 கோடியை வேறு முறையில் ஈட்டி கொண்டுவந்தால் ஒரு ஆண்டில் டாஸ்மாக்கை முழுவதுமாக மூடிவிட முடியும். ஆனால் உடனே இதை செய்ய முடியாது. மது விற்பனை செய்பவர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் தான். அண்ணாமலைக்கும் பங்கு இருக்கிறது. கள்ள சாராயம் விற்பனை வழக்கு, பாலியல் வழக்கு, கொலை வழக்கு இருப்பவர்களை எல்லாம் பாஜகவில் சேர்த்திருக்கிறார்கள்" என்றார் காட்டமாக.


மேலும் படிக்க 'டாஸ்மாக் இல்லாமலேயே தமிழக அரசு இயங்கும்' - செந்தில் பாலாஜி கூறுவது சாத்தியமா?! | ஓர் அலசல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top