நிதி நிறுவனங்களைக் கண்காணிக்காவிட்டால்..?

0

பணம், முதலீடு தொடர்பான விஷயத்தில் மக்கள் எவ்வளவு உஷாராக இருந் தாலும் அதையும் மீறி சில மோசடி நிறுவனங்களிடம் சிக்கி அல்லல்படும் நிலையைத் தினம் தினம் பார்த்து வருகிறோம். அப்படியொரு நிறுவனமாக தற்போது செய்திகளில் அடிபடுகிறது பெரம்பூர் பரஸ்பர சகாய நிதி நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் 10.08% வட்டி தருவோம் என்று சொன்னதை நம்பி 400-க்கும் மேற்பட்டவர்கள் பல கோடி ரூபாயை டெபாசிட் செய்தனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்கள் வர, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் சிலரை கைது செய்து விசாரித்ததில், தற்போதைக்கு ரூ.28 கோடி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பரஸ்பர சகாய நிதி நிறுவனங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்க முடியாத சாதாரண மக்களுக்கு சொத்து அடமானக் கடன், தங்கநகை அடமானக் கடன் அளிப்பதுதான் இந்த நிதி நிறுவனங்களின் பணி. தவிர, மக்களிடம் இருந்து டெபாசிட் பணம் பெற்று, வங்கிகளைவிட கொஞ்சம் கூடுதலாக வட்டியைத் தருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

1990-களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மிக அதிகமான வட்டி தருவதாக சொல்லி பல்லாயிரம் பேரிடம் பல நூறு கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றியதால், பலரும் பாதிப்படைந்ததை யாரும் மறக்க முடியாது.

பரஸ்பர நிதி நிறுவனங்களை வர்த்தக விவகாரத்துறை (MCA) அமைப்புதான் அனுமதி தந்து, கண்காணித்து வருகிறது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து கண்காணிப்பது போல, வர்த்தக விவகாரத் துறை இந்த நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கண்காணிப்பில் குறைகள் நேரும்போதுதான் இது மாதிரியான முறைகேடுகள் நடக்கின்றன. மக்களிடம் இருந்து டெபாசிட்டாகப் பணத்தைப் பெறும் எந்த அமைப்பாக இருந்தாலும், அதை மத்திய, மாநில அரசாங்கங்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

இந்த நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடுவதால்தான் குளறுபடி நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையீடு செய்தால், அதை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். இது மாதிரியான தலையீடுகள் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கையை நேர்மையுடன் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் செயல்படும் எல்லா பரஸ்பர நிதி நிறுவனங்களும் மோசமானவை என்று சொல்ல முடியாது. சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்த நிதி நிறுவனங்களில் மோசடி எதுவும் நடக்காதபடிக்கு விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இவற்றுக்கு மூடுவிழா நடத்தப்படும் நிலை வெகு விரைவிலேயே உருவாகும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க நிதி நிறுவனங்களைக் கண்காணிக்காவிட்டால்..?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top