விழுப்புரம்: `மனைவிக்கு பாலியல் தொல்லை' - தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்; நடந்தது என்ன?

0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு நாகமுத்து, தைமுத்து, மாரிமுத்து மற்றும் வீரமுத்து என நான்கு மகன்களாம். இதில் கடைசி மகனான வீரமுத்துவிற்கு மூன்று வருடத்திற்கு முன்பாக திருமணமான நிலையில், 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த வீரமுத்து, வாரம் ஒரு முறை ஜெயங்கொண்டான் கிராமத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். 

கொலை செய்யப்பட்ட வீரமுத்து & மாரிமுத்து

அதன்படி ஊருக்கு வந்திருந்த வீரமுத்து, தனது இருசக்கர வாகனத்தில் செஞ்சிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு நேற்றுமுந்தினம் இரவு (09.05.2023) சென்றுள்ளார். சுமார் 8 மணி அளவில், பொன்பத்தி கிராமம் பகுதியில் வீரமுத்துவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், பயங்கரமான கத்தியை கொண்டு வீரமுத்துவின் தலை, கால் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீரமுத்து உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலமாக வீரமுத்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். 

அன்று இரவே, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரமுத்து, நேற்று (10.05.2023) அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீரமுத்துவின் மனைவி மங்கம்மாள் செஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் வீரமுத்துவின் சகோதரர் மாரிமுத்துவை போலீஸார் அழைத்துசென்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

'வீரமுத்து ஊருக்கு வரும் சமயங்களில் தனது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனை கண்டித்தும் வீரமுத்து கேட்காததால் கொலை செய்தேன்' என்றும் போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், வீரமுத்துவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றபோது, ஏதும் தெரியாதது போல் மாரிமுத்துடன் ஆம்புலன்ஸில் சென்று நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடன் பிறந்த தம்பியை, அண்ணனே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க விழுப்புரம்: `மனைவிக்கு பாலியல் தொல்லை' - தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்; நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top