தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!

0

தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது.

ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர்

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது.

தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் கலக்கும் சாக்கடை

மலையில் உற்பத்தியாகி தரையில் தலைகாட்டும் பாபநாசத்தில் இருந்து, கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ஆற்றில் 600-க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சாக்கடைக்குள் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

காங்கிரஸார் போராட்டம்

இது குறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் கூறுகையில், ”பாதாளச் சாக்கடை கழிவு நீர் நேரடியாக நெல்லை கால்வாய், பாளையங் கால்வாய்களின் வழியாக ஆற்றுக்குள் கலக்கிறது. அதனால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது. அந்தத் தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இந்த நீரில் குளிப்பவர்களுக்குக் கூட தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வருங்காலச் சந்ததிக்கு இந்த ஆற்றைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையிலேயே இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆற்றின் தற்போதைய நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்” என்றார்.

தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீர்

இது குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். விரைவில் அந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும். பாதாளச் சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லவிடாமல் தடுத்து சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்கிறார்கள்.


மேலும் படிக்க தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top