பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?!

0

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை கடந்த ஜனவரி மாதம் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் தொடங்கிவைத்தார். அப்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும். கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்ததும் அந்த தகவல்கள் மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு சாதியிலும் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரம் இதன் மூலம் திரட்டப்படும்“ என்றார் நிதிஷ் குமார்.

நிதிஷ் குமார்

முதல்வர் இந்த கணக்கெடுப்பை தொடங்கிவைத்ததை அடுத்து, அரசு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்டுவந்தன. இதற்காக, மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்தப்பணியை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென்பது பீகார் அரசின் திட்டம்.

இந்த நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்திவருவதற்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ‘திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தகுதிகள் இருந்தும், இல்லாத ஒரு சாதிப் பிரிவை உருவாக்கி, அதில் அவர்களைச் சேர்த்திருக்கிறார்கள். திருநங்கைகளைத் தனி சாதியாகப் பிரிக்க மாட்டோம் என்று அரசு விளக்கம் அளித்திருக்கிறது என்றாலும், அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலில் அந்த வகைப்பாடு இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு பாகுபாட்டுடன் இருக்கிறது’ என்று வாதிட்டனர்.

பாட்னா உயர் நீதிமன்றம்

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறி, அதற்கு மே 4-ம் தேதி இடைக்காலத் தடைவிதித்தது.

மேலும், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லை என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. மாநில அரசு கையிலெடுத்திருக்கும் இந்த விவகாரம், நாடாளுமன்ற உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கிறது. கணக்கெடுப்பின் விவரங்களைக் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அரசின் நோக்கம் கவலையளிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமை இல்லை என்கிற பட்சத்தில், அதை மீறி வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக உத்தரவுகள் செல்லுபடியாகாது’ என்று பாட்னா உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

“கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்களை பாதுகாக்க அரசு முறையான ஏற்பாடு எதையும் செய்யவில்லை. இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான தேவை குறித்து அரசு தெரிவிக்கவில்லை. எந்தவொரு விளக்கத்தின் மூலமாகவும் இந்த கணக்கெடுப்பை நியாயப்படுத்த முடியாது” என்றும் அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வைத்து எதிர்க் கட்சியான பா.ஜ.க அரசியல் செய்கிறது. ‘நிதிஷ் குமார் அரசு தனது முடிவை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முடியவில்லை. இது, அரசின் மிகப்பெரிய தோல்வி. நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர் சாம்ராட் சௌத்ரி கூறினார்.

தேஜஸ்வி யாதவ்

ஆனால், இது ஒரு இடைக்காலத் தீர்ப்புதான் என்றும், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top