சாத்தூர்: பிரிந்து, பின் இணைந்த கணவன், மனைவி... திருமணம் மீறிய உறவால் பெண் கழுத்தறுத்து கொலை!

0

சாத்தூர் அருகே திருமணம் மீறிய உறவால் பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி மகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது40). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் மகேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்துப்பாண்டி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருமணம் மீறிய தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர்

இந்த விவகாரம் பெரிதாகவும், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மகேஸ்வரியும், முத்துப்பாண்டியும் பிரிந்து வாழ்வதென முடிவெடுத்து சிலகாலம் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்கால நலன்கருதி கணவன், மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதென முடிவெடுத்துள்ளனர். இதற்காக சமாதான பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். கணவருடன் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, தான் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்வதற்காக சென்றுள்ளார் மகேஸ்வரி. ஆனால் அதன்பின் அவர், கணவரின் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மகேஸ்வரி வசித்து வந்த வாடகை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கபபட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகையில், மகேஸ்வரியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த பரமசிவத்திற்கும், அவருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மகேஸ்வரி, கணவருடன் சமாதானமாகி செல்வதை அறிந்து, மகேஸ்வரி வசித்துவந்த வாடகைவீட்டுக்கு வந்த பரமசிவம், அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மகேஸ்வரியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவர் முத்துப்பாண்டியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் நேரில் ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பரமசிவத்தை தேடிவருகின்றனர்" என்றனர்.


மேலும் படிக்க சாத்தூர்: பிரிந்து, பின் இணைந்த கணவன், மனைவி... திருமணம் மீறிய உறவால் பெண் கழுத்தறுத்து கொலை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top