ஆவடி போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது ஏன்... புதிய கமிஷனராக அருண் டிக் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

0

தமிழகத்தில் ஒரே நாளில்  ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக ஆவடி மாநகரத்தின் முதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து , திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி-யாக ஆல்பர்ட் ஜான், சென்னை பூக்கடை துணை கமிஷனராக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்.பி-யாக ஹர்ஸ் சிங், சென்னை மாநகர நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக சீனிவாசன், ஈரோடு மாவட்ட எஸ்.பி-யாக ஜவகர், க்யூ பிரிவு எஸ்.பி-யாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீஸ்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி சரவணன், சென்னை போக்குவரத்து வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக ராஜேஷ் கண்ணன், மாநில குற்ற ஆவணகாப்பக எஸ்.பி-யாக கலைச்செல்வன், வேலூர் எஸ்.பி-யாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி-யாக சாய் பிரனீத், மதுரை தெற்கு துணை ஆணையராக காத்திருப்போர் பட்டியலிலிருந்த பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி சைபர் பிரிவு எஸ்.பி-யாக ஸ்ரீதேவி, திருச்சி தெற்கு துணை கமிஷனராக எஸ்.பி செல்வகுமார், ஆவடி செங்குன்றம் துணை கமிஷனராக பாலகிருஷ்ணன், பாதுகாப்புப்பிரிவு எஸ்.பி-யாக ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாக சாமிநாதன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக சேஷாங் சாய், கமாண்டோ பிரிவு எஸ்.பி-யாக அருண் பாலகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மாநில உளவுத்துறை எஸ்.பி சரவணனுக்கு ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி தீபா சத்தியன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். உளவுத்துறை கூடுதல் எஸ்.பி. சரவணகுமாருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு எஸ்.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி வினோத் சாந்தாராமுக்கு சி.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு எஸ்.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

அன்பு ஐ.பி.எஸ்

தாம்பரம் மாநகர கூடுதல் கமிஷனர் காமினி, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு ஐ.ஜி-யாக மாற்றப்பட்டிருக்கிறார். ஆயுதப்படை ஐ.ஜி ராதிகா, அமலாக்கப் பிரிவு ஐ.ஜி-யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் அன்பு, சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். ஆவடி மாநகர கூடுதல் கமிஷனர் நஜ்மல் ஹோடா, தலைமையிட நலப்பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கப் பிரிவு ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜீவ் குமாருக்கு, டி.ஜி.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மாநகரத்தில் முதல் போலீஸ் கமிஷனராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், காவல் பயிற்சி அகடாமி டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய் குமார் சிங், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த வன்னிய பெருமாள், அதன் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அதிரடி மாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

டிஜிபி அலுவலகம்

இது குறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர், சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தார். இந்தச் சூழலில்தான், அவர் ஏ.டி.ஜி.பி-யாக இருந்து டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். சீனியர் ஆபீஸரான சந்தீப்ராய் ரத்தோருக்கு தி.மு.க மேலிடத்தில் நல்ல பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நடந்த சில முக்கிய சம்பவங்கள் குறித்து உளவுத்துறை அடிக்கடி ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் சந்தீப்ராய் ரத்தோர், பதவி உயர்வு பெற்றதும் அவர் போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி காலியாகும் தகவலை சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த சிவில் சப்ளையில் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அருண் ஐ.பி.எஸ், தி.மு.க மேலிடத்தின் மூலம் அந்தப் பதவியைப் பெற காய் நகர்த்தி வந்தார். அப்போதே அவருக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி உறுதி என தி.மு.க மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தது. அதன்படி ஆவடி மாநகர போலீஸில் இரண்டாவது கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இதையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய மரணச் சம்பவத்தால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புலனாய்வு (சி.ஐ.யூ) எஸ்.பி-யாக இருந்த ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்தில் சிலருக்கு ஜாக்பாட்டும், பலருக்கு தண்டனை பதவியும் கிடைத்திருக்கிறது" என்றனர்.


மேலும் படிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது ஏன்... புதிய கமிஷனராக அருண் டிக் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top