Dhanush D50 Exclusive: `வடசென்னை' களம், ஜூலையில் படப்பிடிப்பு, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'D-50' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. இதுகுறித்து தனுஷின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இங்கே...

எஸ்.ஜே.சூர்யா

செல்வராகவனின் 'சாணி காயிதம்' பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த மாதமும், அதற்கு அடுத்த மாதம் டீசரும் வெளியாகின்றன. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு, அடுத்த மாதத்தோடு நிறைவடைகிறது.

தனுஷ்

இதனை அடுத்தே, தனுஷ் தனது 50வது படமான 'D50' படத்திற்கு வருகிறார். வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பிற்காக லொக்கேஷன் தேடி வருகின்றனர். D50 இன்ட்ரோ போஸ்டரில் காட்டிய இடம் போல, அரங்கம் அமைக்க உள்ளனர். அதற்காக லொக்கேஷனை இரவும் பகலுமாகத் தேடிவருகின்றனர். அரங்கம் அமைக்கும் வேலைகளே ஒரு மாதம் எடுக்கும் என்பதால், ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்குச் சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதில் ஹைலைட்டே தனுஷ் ரசிகர்களும் சரி, இயக்குநர் வெற்றிமாறனின் ரசிகர்களும் சரி, அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது `வடசென்னை 2'க்குத்தான். இந்தப் படமும் வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் இதன்மீது கூடுதல் எதிர்பார்ப்பு வந்துள்ளது.

ஜூலை 28ல் தனுஷின் பிறந்தநாள் வருகிறது. அன்று 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரும், 'D50' படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகலாம். 'D50'யில் விஷ்ணு விஷாலும், காளிதாஸ் ஜெயராமும் முடிவாகிவிட்டனர். 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார் சந்தீப் கிஷன். எனவே, அவர் இந்தப் படத்திலும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது இன்னமும் உறுதியாகவில்லை.

தனுஷ், பிரியங்கா மோகன்

சில வருடங்களுக்கு முன்னர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கமிட் ஆகியிருந்தனர். ஒரு ஷெட்யூலுக்கும் குறைவாகப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. எனவே அதில் நடிக்கவிருந்த எஸ்.ஜே.சூர்யாவும் தனுஷின் குட்புக்கில் உள்ளார். ஆகவே 'D50'யில் அவர் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் அண்ணன் கதாபாத்திரத்திலிருந்தாலும், அவர்தான் வில்லன் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

இவர்களைத் தாண்டி, வேறு சிலரிடமும் பேசி வருகின்றனர். தனுஷே படத்தின் இயக்குநர் என்பதால் 'கேப்டன் மில்லர்' படத்தை முடித்துவிட்டே நடிகர்கள் தேர்வில் இறங்குவார் என்றும் சொல்கிறார்கள்.

மேலும் படிக்க Dhanush D50 Exclusive: `வடசென்னை' களம், ஜூலையில் படப்பிடிப்பு, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top