Doctor Vikatan: தினமும் 20 கிலோ மீட்டர் டிரைவிங்... வாகனம் ஓட்டும்போதே தூக்கம்... காரணம் என்ன?

0

Doctor Vikatan: என் வயது 45. தினமும் 20 கிலோமீட்டர் டிரைவிங் செய்கிறேன். பல நேரங்களில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்துவிடுகிறது. சிக்னலில் இப்படித் தூங்கிய அனுபவம் உண்டு. இதற்கு என்ன காரணம்? தீர்வுகள் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்

பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை

இந்தப் பிரச்னையை 'Sleeping at the wheels' என்று சொல்வதுண்டு. அதாவது வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே தூங்குவது. இந்தப் பிரச்னை மிகமிக ஆபத்தானது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தும் நீங்கள் கார் ஓட்டுவதைத் தொடர்வது விபத்துக்கு காரணமாகும்.

இந்தப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்து, முற்றிலும் குணமாகும்வரை நீங்கள் கார் ஓட்டுவதை நிறுத்திவைப்பதுதான் முதல் தீர்வு. அதுதான் உங்களுடைய பாதுகாப்புக்கும், மற்றவர்களின் பாதுகாப்புக்கும் நல்லது.

கார் ஓட்டும்போதே தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா (Obstructive sleep apnea (OSA) என்ற நிலையே பிரதான காரணமாக இருக்கக்கூடும். இது உடல் பருமன் அதிகமுள்ளோருக்கு வரக்கூடியது. இவர்கள் இரவில் தூங்கும்போது குறட்டை அதிகம் விடுவார்கள்.

உடல் பருமன்

இதனால் தூக்கத்தில் இடையிடையே தொந்தரவு ஏற்படும். உணவுக் குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதியில் (pharynx) அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி அடைப்பு ஏற்படும்போது தன்னிலை மறந்து ஒருவித அதிர்ச்சியோடு எழுந்திருப்பார்கள். தொடர்ச்சியான இடையூறு காரணமாக சம்பந்தப்பட்ட நபருக்கு நன்கு தூங்கிய புத்துணர்வே இருக்காது.

அதன் காரணமாக அவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அடுத்து ஒபிசிட்டி ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் (Obesity hypoventilation syndrome (OHS) என்ற பிரச்னையும் ஒரு காரணம். பருமனானவர்களுக்கு வரும் இந்த பாதிப்பில் மூச்சுவிடும் தன்மையில் மாறுதல்கள் ஏற்படும். அதனால் களைப்பும் அசதியும் ஏற்படலாம்.

அப்படியானால் தூக்கத்தில் குறட்டை விடுகிற எல்லோருக்கும் இப்படி வருமா என்றால் இல்லை. இரவில் நன்றாகத் தூங்குவதாக நினைத்துக்கொண்டிருப்போருக்கும், அவர்களை அறியாமல் இப்படி நடக்கலாம். ஏழெட்டு மணி நேரம் தூங்கியதாகச் சொன்னாலும், அவர்களுக்கும் இரவில் தூக்கத்தில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, அது குறட்டையாக மாறி, தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

பகலில் தூங்கும் பிரச்னைக்கு நீங்கள் மருத்துவரை அணுகி, அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா அல்லது ஒபிசிட்டி ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் இரண்டில் ஏதேனும் இருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும்.

பகல் தூக்கம் நல்லதா?

இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் வேறு காரணங்களால் உங்களுக்கு இரவில் நிறைவான தூக்கம் இல்லையா என்பதையும் மருத்துவ ஆலோசனையில் தெரிந்துகொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஏதோ காரணத்தால் இரவுத்தூக்கம் பாதிக்கப்படுவதுதான் இப்படி பகலில் தூக்கம் வர காரணம். அதைத் தெரிந்துகொண்டு தாமதிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: தினமும் 20 கிலோ மீட்டர் டிரைவிங்... வாகனம் ஓட்டும்போதே தூக்கம்... காரணம் என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top