Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் ஏற்படும் அலர்ஜி... அதை விட்டு விலகுவதுதான் தீர்வா?

0

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 5 வருடங்களாக நாய் வளர்க்கிறோம். இப்போது திடீரென என் 10 வயது மகளுக்கு நாய் அலர்ஜி உள்ளதாகச் சொல்கிறார் மருத்துவர். என் மகளுக்காகத்தான் அந்த நாய்க்குட்டியையே வாங்கினோம். இப்போது அதன் அருகே போகக்கூடாது என்பதை அவளுக்கு எப்படிப் புரியவைப்பது? நாயை வீட்டைவிட்டு விரட்டவும் யாருக்கும் மனதில்லை. இந்த அலர்ஜியானது காலம் முழுவதும் தொடருமா அல்லது மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பதால் ஏற்படும் அலர்ஜி, அவற்றை வளர்க்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆரம்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, சில நாள்கள் கழித்து, தும்மல், மூக்கடைப்பு, வீஸிங் போன்ற அறிகுறிகளாக வெளிப்படலாம். ஆனால் அவை செல்லப் பிராணிகளால் ஏற்பட்ட அலர்ஜியின் அறிகுறிகள் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதை உறுதி செய்ய பரிசோதனைகள் உள்ளன. இது பொதுவாக சருமத்தில் செய்யப்படும். அப்படிச் செய்ய முடியாத குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை மூலம், அலர்ஜிக்கான IgE  மற்றும் Allergen-Specific Immunoglobulin E Test செய்து பார்க்க வேண்டும். இவற்றில் ஒன்றோ, இரண்டுமோ அலர்ஜி இருப்பதை உறுதி செய்தால், செல்லப் பிராணிகளைப் பிரிந்து இருப்பதுதான் தீர்வு.

அலர்ஜிக்கான சிகிச்சை இருந்தாலும், அதற்கான அடிப்படை காரணத்தைத் தவிர்ப்பதுதான் சரியானது. அதாவது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு, சூழல், பிற பொருள்களைத் தவிர்ப்பதுதான் அலர்ஜி சிகிச்சையில் அடிப்படை.

அலர்ஜி இருப்பது தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாத பட்சத்தில், டீசென்சிட்டைசேஷன் (Desensitization)  என்ற தீர்வு இருக்கிறது. ஆனால் இது பலவித பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடியது. எல்லா விதமான அலர்ஜிக்கும் இது தீர்வாகவும் அமையாது.

தூசு, அதிலுள்ள பூச்சிகளால் ஏற்பட்ட அலர்ஜிக்கு டீசென்சிட்டைசேஷன் தீர்வாகலாம். அதுவே வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் அலர்ஜிக்கு, இது முழுமையான பலன் தராது.

அலர்ஜி

வாழ்க்கை முழுவதும் இதைத் தொடர வேண்டுமா என்றால். அதற்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாது. சிலருக்கு சில காலம் ஒவ்வாமைக்கான காரணத்தைத் தவிர்த்து வாழும்போது அது சரியாகலாம். இது உணவுக்கும் பொருந்தும்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை குறிப்பிட்ட காலத்துக்குத் தவிர்த்துவிட்டு, மீண்டும் உண்ணும் போது அது அலர்ஜியை ஏற்படுத்தாமலும் போகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் ஏற்படும் அலர்ஜி... அதை விட்டு விலகுவதுதான் தீர்வா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top