Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி... குணப்படுத்த வழிகள் உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 52. கடந்த சில மாதங்களாக வெஜைனா பகுதியில் அதீத வறட்சியை உணர்கிறேன். திடீரென ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? வெஜைனா பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவருமான சந்தியா வாசன்.

மகப்பேறு & அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சந்தியா வாசன் | சென்னை

வெஜைனா பகுதியில் ஏற்படும் வறட்சியானது 90 சதவிகிதப் பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் தான் வரும். மெனோபாஸ் காலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையும்போது வெஜைனா பகுதியில் வறட்சியை உணர்வார்கள்.

இந்த வறட்சியைத் தவிர்க்க, வெஜைனா பகுதியை வெந்நீரில் கழுவக்கூடாது. அது வறட்சியை இன்னும் அதிகமாக்கும். தவிர அந்தப் பகுதியில் கிருமிநாசினியோ, தேங்காய் எண்ணெயோ, வேறு எதுவுமோ உபயோகித்து சுத்தப்படுத்தக் கூடாது. வெஜைனா பகுதியை சுத்தப்படுத்தவென இன்று பிரத்யேக வாஷ் கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். சாதாரண தண்ணீரில்தான் சுத்தப்படுத்த வேண்டும்.

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம்.

வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்ஃபெக்ஷனை தடுக்கிறேன் என்ற பெயரில் வெஜைனா பகுதியில் கிருமி நாசினிகளை உபயோகிப்பார்கள். உப்புத் தண்ணீரில் கழுவுவார்கள். இதெல்லாம் அந்தப் பகுதியின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.

வெஜைனா

வறட்சியைப் போக்க சிலர் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறார்கள். அதுவும் தவறு. அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, உள்ளாடைகளை கிருமிநாசினி கொண்டு துவைப்பதெல்லாம் கூடாது. குளித்து முடித்ததும், கழிவறை பயன்படுத்தி முடித்ததும் அந்தரங்க உறுப்புகளின் ஈரம்போகத் துடைத்துவிட்டுதான் உள்ளாடைகளை அணிய வேண்டும். தளர்வான உள்ளாடைகளாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி... குணப்படுத்த வழிகள் உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top