Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்... நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 30. சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருப்பது என் முகப்பொலிவையே கெடுக்கிறது. சருமத்துவாரங்கள் பெரிதாக இருக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையை நிரந்தரமாக சரியாக்க சிகிச்சைகள் ஏதும் இருக்கின்றனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமத்துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

சருமத்துவாரங்கள் பொதுவாக, மூக்கு, கன்னங்களுக்கு அருகில் இருக்கும். நம் சருமத்தில் எண்ணெய்ப்பசை சுரக்கும். சிலருக்கு இது அளவுக்கதிகமாகச் சுருக்கும். அதனால் பருக்கள் அதிகமிருக்கும். முகத்திலுள்ள சருமம் வீக்கத்துடன் காணப்படும். இதனால் சருமத்துவாரங்கள் பெரிதாகி, வெளியே தெரியும். நம்முடைய சீதோஷ்ணநிலை காரணமாகவும் சிலருக்கு சருமத் துவாரங்கள் வெளிப்படையாகத் தெரியும். இது சாதாரணமானதுதான். ஆனால் அது முக அழகையே கெடுக்கும்படி பெரிதாகத் தெரிவதால்தான் பலரும் அது குறித்துக் கவலை கொள்கிறார்கள்.

இதை ஒரு க்ரீமாலோ, ஜெல் மூலமோ நிரந்தரமாக நீக்கவெல்லாம் முடியாது. அது தெரியாமல் பலரும் மருத்துவப் பரிந்துரையில்லாமல் மருந்துக் கடைகளில் க்ரீம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

சில வீடியோக்களில் சிலிக்கான் சிகிச்சைகள் மூலம் இந்த துவாரங்களை நிரந்தரமாக நீக்கிவிட முடியும் என்றெல்லாம் காட்டப்படுவதை உண்மையென நம்பி, மருத்துவ ஆலோசனையின்றி அவற்றைச் செய்து கொள்ள முனைகிறார்கள். அப்படியானால் சருமத் துவாரங்களை சரிசெய்ய சிகிச்சைகளே இல்லைபோல என நினைத்துக்கொள்ள வேண்டாம்.

முகப் பராமரிப்பு

சருமத் துவாரங்களை சரிசெய்வதற்கான சிகிச்சைளை பொதுவாக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம். க்ரீம் உபயோகிப்பதன் மூலம், எனர்ஜி அடிப்படையிலான கருவிகளின் மூலம், ஊசிகள் மூலம் என இதை பல வழிகளில் அணுகலாம்.

பருத் தொல்லையும், எண்ணெய்ப்பசையான சருமமும்தான் இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம். எனவே முதலில் அந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். அதையடுத்து வைட்டமின் ஏ, ரெட்டினால் கலந்த க்ரீம் உபயோகிக்கும்போது சருமத் துவாரங்கள் நன்கு சுருங்கும்.

எனர்ஜி பேஸ்டு கருவிகளான மைக்ரோ நீட்லிங் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம். இதன் மூலம் சருமத்தின் கீழே உள்ள திசுக்கள் தூண்டப்பட்டு துவாரங்கள் மூடப்படும்.

ஹைலுரானிக் ஆசிட் உள்ள ஊசி போடப்படும்போது, சருமத்தில் ஈரப்பதம் அதிகமாகி, துவாரங்கள் மூடும். ஆனால் இதன் பலன் 8 முதல் 12 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

முகம்

மற்றபடி இது நிரந்தரமான சிகிச்சை அல்ல. உங்களுக்கு எந்தச் சிகிச்சை தேவை, எப்படிச் செய்யப்படும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள சரும மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்... நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top