New Parliament Building : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

0

நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குக் கிளம்பிய தமிழ்நாட்டு ஆதீனங்கள்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ், புதிய நாடாளுமன்றக் கட்டடம் பெரும் மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் பிரதமர் மோடி, இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடந்து கொண்டிருக்கின்றன.

New Parliament Building

இந்த புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில், தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் செங்கோலை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி அந்தச் செங்கோலானது நேற்றைய தினம் தமிழ்நாட்டு ஆதீனங்களால், பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அதற்காக ஆதீனங்கள் அனைவரும், நேற்று பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்துக்குச் சென்றிருந்தனர். அங்கு பிரதமர் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து, இன்றைய தினம் நாடாளுமன்றத் திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 7:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு அருகே பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். பின்னர், காலை 8:30 மணி முதல் 9 மணி வரை செங்கோல் வைப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

சபாநாயகரின் இருக்கைக்கு அருகே கண்ணாடி பெட்டியில் செங்கோல் வைக்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள். அதைத் தொடர்ந்து 9:30 மணிக்கு பண்டிதர்கள், துறவிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.

New Parliament Building

விழாவின் இரண்டாம் கட்டமாக மதியம் 12 மணிக்கு , பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, விழாவில் இரண்டு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. பின்னர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் பேசுகிறார். அதையடுத்து திறப்பு விழாவின் நினைவாக ரூ.75 நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்படுகின்றன.

நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக பிரதமர் மோடி 2:30 மணிக்கு உரையாற்றுகிறார். அத்துடன் திறப்பு விழா நிறைவடைகிறது.


மேலும் படிக்க New Parliament Building : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top