Pawan Kalyan: `விநோதய சித்தம்' ரீமேக் முதல் வரலாற்றுப் படம் வரை; பவன் கல்யாணின் பவர்ஃபுல் அப்டேட்ஸ்!

0
பவர் ஸ்டார் பவன் கல்யாண் - இந்த வார்த்தைக்கு அத்தனை வலிமை இருக்கிறது டோலிவுட்டில். பவன் கல்யாண் ரசிகர்கள் என்று சொல்வதை விட பவன் கல்யாண் பக்தர்கள், வெறியர்கள் என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு பவனின் படத்தை கொண்டாடி தீர்ப்பார்கள்.

அவரே "என்னுடைய இந்தப் படம் சரியாக ஓடவில்லை" என்று சொன்னால் கூட "வாயில அடிங்க... வாயில அடிங்க... அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்தப் படம் ப்ளாக்பஸ்டர்" என்று சொல்லி முட்டுக்கொடுக்குமளவுக்கு வெறித்தனமான பவர் ஸ்டார் விழுதுகள் அவர்கள். அதனால் அவரின் ரசிகர்களுக்காகவே பல மாஸ் மொமன்ட்களையும் பன்ச் டயலாக்குகளையும் படத்தில் வைப்பார்கள்.

சாய்தரம் தேஜ், சமுத்திரக்கனி, பவன் கல்யாண்

சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான படம் 'பீம்லா நாயக்'. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் ரீமேக். படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியிருந்தாலும்  அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கடுத்து, அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகின்றன.

அதில் முதலாவதாக வெளியாவது, சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாணும் சாய்தரம் தேஜும் நடித்திருக்கும் படம். தமிழில் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக். பவன் கல்யாணுக்குத் தகுந்த மாதிரி சில பல மசாலாக்களைச் சேர்த்து, மாற்றங்களைச் செய்து பக்கா டோலிவுட் கன்டன்டாக படம் உருவாகியிருக்கிறது. வரும் ஜூலை 28ம் தேதி வெளியாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

சுஜீத், பவன் கல்யாண், ரவி.கே.சந்திரன்

அடுத்ததாக, 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 'OG'. 'RRR' படத்திற்குப் பிறகு, டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படமிது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தமன் இசை, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு எனப் பயங்கரமான டீமை வைத்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. தற்போது, இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான் பவன் இருக்கிறார்.

இன்னொரு படம், 'உஸ்தாத் பகத் சிங்'. பவன் கல்யாண் கரியரின் முக்கிய படமான 'கப்பர் சிங்' படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இதனை இயக்குகிறார். 'புஷ்பா' படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் பவன் கல்யாணுக்கு ஹீரோயினாக தற்போதைய சென்சேஷன் ஶ்ரீலீலா நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வாரங்களே படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். இந்தப் படத்தின் க்ளிம்ஸ் மே 11ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பவன் கல்யாண் படங்கள்

இவை எல்லாவற்றுக்கும் முன்னாலேயே தொடங்கப்பட்ட படம், 'ஹரி ஹர வீரமல்லு'. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இயக்குநர் க்ரிஷ் இயக்கும் பீரியட் படம் இது. இதற்காக தற்காப்பு கலை பயிற்சி எடுத்துக்கொண்டார் பவன் கல்யாண். இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தின் வெளியீடு அடுத்த வருடம் இருக்கும் என்கிறார்கள்.

கடைசியாக 2012ம் ஆண்டுதான் பவன் கல்யாண் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகியிருக்கின்றன. அதற்குப் பிறகு, இந்த வருடம்தான் அது மீண்டும் நடக்கவிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மூன்று படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு 2023 செம ட்ரீட்டாக இருக்கப்போகிறது.

பவன் அபிமானலு கெட் ரெடி!


மேலும் படிக்க Pawan Kalyan: `விநோதய சித்தம்' ரீமேக் முதல் வரலாற்றுப் படம் வரை; பவன் கல்யாணின் பவர்ஃபுல் அப்டேட்ஸ்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top