இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
தமிழகத்தில் கோடைகாலத்தில் பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க Tamil News Live Today: தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! - வானிலை ஆய்வு மையம்