கதரநத: ர.1.25 பலலயன ஊழல(?)... கதரகள சதரவத - அடததடதத வடதத சரசச!

0

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், மத வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க பிளேட் பொருத்தியதில் ரூ.1.25 பில்லியன் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறையின் மேற்பார்வையில் கோயில் கருவறை மற்றும் அதன் சுவர்களில் தங்கபிளேட் பொருத்தும் நடந்தது. இதற்கு 23.777 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பு 14.38 கோடியாகும். இது தவிர ஆயிரம் கிலோ காப்பரும் இதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சார்தாம் மகாபஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தோஷ் திரிவேதி அளித்த பேட்டியில், கேதார்நாத் கோயில் கருவறைக்கு தங்க பிளேட் பொருத்தப்பட்டதில் 1.25 பில்லியன் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், தங்கத்திற்கு பதில் பித்தளை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சத்யபால் மகாராஜ் தெரிவித்துள்ளார். சார்தாம் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் இக்குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதாகவும், பொற்கொல்லர்கள் உட்பட நிபுணர்கள் அடங்கிய குழு இது குறித்து விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சார்தாம் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சார்தாம் யாத்திரை என்பது யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் போன்ற இடங்களுக்கு செல்வதாகும். இவை மலைப்பகுதியில் இருக்கிறது. இந்த நான்கு இடங்களுக்கும் செல்லும் போது பயணிகள் ஏராளமான இன்னல்களை சந்திக்கின்றனர். கேதார்நாத் சார்தாம் யாத்திரை என்பது 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது குதிரை மற்றும் கழுதை மூலமாகவோ கேதர்நாத் கோவிலுக்கு செல்கின்றனர்.

இந்த கேதர்நாத் யாத்திரையின் போது குதிரை மற்றும் கழுதைகள் மிகவும் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளிவந்தது. அதில் இரண்டு பேர் குதிரையை புகைபிடிக்க வைத்து சித்ரவதை செய்வது போன்று இருந்தது. 27 விநாடி வீடியோவில், இரண்டு பேர் குதிரையை புகைபிடிக்கும்படி வற்புறுத்துவதையும், அதன் மூக்கில் சிகரெட்டை தள்ளுவதையும் காண முடிகிறது.

குதிரை சித்ரவதை

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட ஒரு நபர் குதிரையின் மூக்கை இறுக்கி அதன் வாயை தனது கைகளால் மூடினார்.

மற்றொருவர் குதிரையின் மூக்கில் கஞ்சா இருந்த சிகரெட்டை சொருகினார். சில வினாடிகளுக்குப் பிறகு, குதிரை புகையை வெளியிடுவதைக் காண முடிந்தது. கேதார்நாத் மலையேற்றத்தில் இருவர் குதிரையை கஞ்சா புகைக்க வைத்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கேதார்நாத் போலீஸார் விசாரணையில் இறங்கினர். மேலும், வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காண முயற்சிப்பதாக போலீஸார் தங்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

கேதார்நாத் கோயில்

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அருகில் உள்ள காவல்துறை அல்லது 112 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் இதுவரை முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் தேவையான உதவிகளை வழங்கி இருப்பதாக விலங்குகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நடிகை ரவீணா தண்டன் உத்தரகாண்ட் அரசிடம் இது தொடர்பாக புகார் செய்துள்ளார். குதிரையை சித்ரவதை செய்தவர்களை கைது செய்யுமாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார். ரவீணா தனது ட்விட்டர் பதிவில், 'எங்கள் புனித இடங்களில் குதிரைகளை தொடர்ந்து துன்புறுத்துவதை நிறுத்த முடியுமா? அப்பாவிகள் சித்திரவதை செய்யப்படும்போது பிரார்த்தனையால் இவர்கள் என்ன பலன் அடைகிறார்கள். இவர்களை கைது செய்ய முடியுமா?' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க கேதார்நாத்: ரூ.1.25 பில்லியன் ஊழல்(?)... குதிரைகள் சித்ரவதை - அடுத்தடுத்து வெடித்த சர்ச்சை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top