``செந்தில் பாலாஜி... ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டதாக சொல்கிறார்கள்" - திருச்சியில் ஹெச்.ராஜா

0

திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள திருச்சி பா.ஜ.க., அலுவலகத்தில் பா.ஜ.க., அரசின் 9-வது ஆண்டு சாதனைகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச்.ராஜா, ``தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது, செந்தில் பாலாஜியையோ, ஸ்டாலினையோ பதவியை விட்டு ராஜினாமா செய்யச் சொல்லாதவர்கள், எதிர்பாராதவிதமாக நடந்த ரயில் விபத்திற்காக பிரதமரை பதவி விலகச் சொல்வது ஏன்? இந்தியாவில் தொடர்ந்து 34 மாதங்களாக ரயில் விபத்தே நடைபெறவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது.

ஒடிசா ரயில் விபத்து

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடலை அனுப்பி நிவாரணம் கொடுத்து, 24 மணி நேரத்தில் விபத்துக்குள்ளான ரயில் பாதையை சரிசெய்துள்ளோம். மீண்டும் ரயில் சர்வீஸ் ஆரம்பித்துவிட்டது. ரயில்வே மினிஸ்டர் சம்பவ இடத்திலேயே இருக்கிறார். விபத்து நடந்த உடனேயே பிரதமர் சம்பவ இடத்திற்குச் சென்றார். ராணுவமும் அங்கு உடனே போனது. இதனையெல்லாம் விரும்பாதவர்கள் தான் இப்போது தேவையில்லாமல் புலம்ப ஆரம்பித்துள்ளனர்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``ரயில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என பிரதமரும் சொல்லியிருக்கிறார். தி.மு.க., சீனியர்கள் யாருமே செந்தில் பாலாஜியைப் பற்றி வாய் திறப்பதில்லை. மத்திய அரசினுடைய இயக்கத்தால் ரெய்டு நடத்தப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லாமல் ரெய்டுக்கு செல்ல மாட்டார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் தான் ரெய்டு நடந்திருக்கிறது.

ஹெச்.ராஜா

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அறிக்கை வந்தபிறகு தான் மற்ற முழு விஷயங்கள் எல்லாம் தெரியவரும். ஆடு – புலி – புல்லு கதை தான் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நடைபெறும். நிச்சயமாக எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பே இல்லை. மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு விசாரணை செய்த காவலர்கள், குற்றம் சாட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்” என்றார்.


மேலும் படிக்க ``செந்தில் பாலாஜி... ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டதாக சொல்கிறார்கள்" - திருச்சியில் ஹெச்.ராஜா
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top