கிருஷ்ணகிரி: `சிப்காட் நிலப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும்’ - 150 நாள்களாக போராடிய விவசாயி மரணம்

0

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க, கடந்த 2022, ஏப்ரல் மாதம் மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், 3,034 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிட்டதுடன், வருவாய்த்துறை இதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியது.

போராட்டம் நடத்தும் பெண்கள்.

கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலத்தில், நெல், கேரட், தக்காளி என, பலவகை பயிர்கள் சாகுபடி செய்யும் விளைநிலங்களாக, மூன்று போக சாகுபடியும் முழுமையாக நடக்கும் அளவுக்கு நீராதாரமுள்ள விளைநிலங்களாக உள்ளன. இதனால், நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆடு, மாடுகளுடன் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, சாலைமறியல் எனப்பல போராட்டங்கள் நடத்தியதுடன் கடந்த ஜனவரி, 6-ம் தேதி முதல், காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இறந்த விவசாயி அன்னையப்பா.

இப்படியான நிலையில், 150 நாட்கள் போராட்டத்தை நிறைவு செய்த விவசாயிகள், நேற்று முந்தினம் முதல், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், 150 நாள்கள் தொடர்ந்து போராட்ட களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்த, மூத்த விவசாயி அன்னையப்பா (60), நேற்று முந்தினம், இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சிய அரசு...

இது குறித்து,  ‘சிப்காட் நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குழு’ ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் நம்மிடம், ‘‘தொடர்ந்து, 150 நாட்களை கடந்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை செவிமடுக்காமல், பிரச்னைக்கு தீர்வு காணாமல் அலட்சியமாக உள்ளது.

சத்திய நாராயணன்.

150 நாள்களாக தொடர்ந்து போராட்ட களத்துக்கு வந்த, அன்னையப்பா, நேற்று முந்தினம் காலை, போராட்ட களத்துக்கு வருவதற்கு தனது வீட்டில் தயாரான போது, உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். தனது நிலம் பறிபோகுமென்ற அச்சத்தில், இத்தனை நாட்களாக மன உளைச்சலில், போராட்ட களத்துக்கு வந்த அன்னையப்பா இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. நேற்று காலை கூட, உண்ணாவிரத போராட்டத்தில், 3 பேர் மயங்கி விழுந்துள்ளனர். அலட்சிய அரசு விரைவில், சிப்காட் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார், வருத்தத்துடன்.


மேலும் படிக்க கிருஷ்ணகிரி: `சிப்காட் நிலப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும்’ - 150 நாள்களாக போராடிய விவசாயி மரணம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top