நமககல: 1800 பகக மரஙகள வடட சயபப; கவலரகள இரநதம ஓயத பரசன - தரவ எபபத?

0

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்க சென்ற திருமணம் ஆன இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அருகில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த பெண்ணின் உறவினர்கள், "இந்த கொலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு தொடர்புள்ளது. அவர்களையும் கைது செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் இரு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த மே மாதம் 13-ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீவைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதில், 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதந்த நூற்றுக்கணக்கான போலீஸார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், அதையும் மீறி மீண்டும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600 - க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

இதுபோல் தற்போதும் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (60). இவரின் விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் உள்ளது. அங்கே உள்ள அவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில், அவரின் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து என்பவர் நேற்று அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது, சௌந்தர்ராஜன் தோட்டத்தில் இருந்த சுமார் 1,800க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, அந்த தகவலை நிலத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்கும் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேடர்பாளையம்

மேலும், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், பாக்கு மரம் மற்றும் அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஊர் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த நிலையில், எப்படியோ மர்ம நபர்கள் தைரியமாக இதுபோல் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருவதால், அடுத்து எந்தெந்த பகுதிகளில் என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிக்கு காவல்துறை, வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர்,

"இந்த தொடர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?. ஒவ்வொரு நாளும், இன்னைக்கு யார் வீட்டு தோட்டத்தை அழிக்கப்போகிறார்கள், யார் வீட்டில் தீவைக்கப்போகிறார்கள் என்ற பயத்திலேயே மக்கள் வாழ வேண்டியுள்ளது. அந்த இளம்பெண்ணின் கொலைக்கு பிறகு, இது சமூக பிரச்னையாக உருவெடுத்ததோடு, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் மாறியிருக்கிறது. அதில், ஒரு வடமாநில இளைஞரின் உயிரும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக இருந்தவரும், ஆட்சியரும் இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேசிப்பார்த்தார். ஆனால், அதன்பிறகும் பிரச்னை ஓயவில்லை. அதனால், ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, மூன்று டி.எஸ்.பிகள் என்று பலரையும் பணிமாறுதல் செய்தார்கள். ஆனால், புதிதாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி வந்தபிறகு, இவ்வளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் இருக்க்கும்போதுமே, தொடர்ந்து இதுபோல் பிரச்னைகள் நடப்பது கொடுமை. போலீஸார் மெத்தனமாக செயல்படுவதையே இது காட்டுகிறது. தினம் தினம் அச்சத்துடனேயே வாழும் மக்களை, அரசின் இரும்புகரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைதான் காக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

தீ வைப்பு சம்பவம்

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தால், "நாங்கள் மெத்தனமெல்லாம் காட்டவில்லை. எல்லாவகையிலும் ஊர் முழுக்க போலீஸ் ஃபோர்ஸை இறக்கி, 24 மணிநேரமும் பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். ஆனால், அதையும் மீறி மர்மநபர்கள் இப்படி செய்துவிடுகிறார்கள். இருந்தாலும், இதுபோன்று ஏற்படுத்தப்படும் பிரச்னைகள் தடுக்க, இன்னும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம். இனிமேல் ஒரு சம்பவம்கூட இதுபோல் நடக்காது" என்றார்கள்.


மேலும் படிக்க நாமக்கல்: 1,800 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு; காவலர்கள் இருந்தும் ஓயாத பிரச்னை - தீர்வு எப்போது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top