கரள: கணடலரநத தபபய அனமன கரஙக... சஙகஙகளகக லய நல என பயர வதத அமசசர!

0

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா விலங்கியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி அனுமன் குரங்குகள் மற்றும் இரண்டு சிங்கங்கள் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 5-ம் தேதி கொண்டுவரப்பட்டது. வெளியில் இருந்து புதிதாக வரும் மிருகங்கள் தனிமைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அனுமன் குரங்குகள் தனி கூண்டில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் குரங்குகளுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் சோதனை முயற்சியாக அவை திறந்துவிடப்பட்டன.

லியோ சிங்கம்

அதில் பெண் குரங்கு உடனே வெளியே குதித்து ஓடியது. பெரிய மரத்தில் ஏறிய குரங்கு காம்பவுண்ட் சுவரைத்தாண்டி வெளியே குதித்து ஓடியது. நந்தங்கோடு பகுதிக்குச் சென்று ஒரு வீட்டுக்கு அருகே மரத்தின்மீது ஏறி உட்கார்ந்து இருந்தது. பின்னர் மீண்டும் தனது ஜோடியை தேடி உயிரியல் பூங்காவின் காம்பவுண்டில் வந்து அமர்ந்தது. அதை பிடித்து கூண்டில் அடைக்கும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். அதற்காக குரங்குக்கு பிடித்தமான உணவுகளை அங்கு வைத்துள்ளனர். ஆனால் உழியர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேற்று முறைப்படி குரங்குகள் மற்றும் சிங்கங்களை கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி திறந்துவிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குரங்கு ஒன்று தப்பி ஓடிவிட்டது. அனுமன் குரங்கு தப்பி ஓடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மூன்று வயது அனுமன் வகை குரங்கை பிடிக்க மயக்க மருந்து செலுத்தும் திட்டம் இல்லை எனவும், இதில் ஊழியர்கள் மீது தவறு இல்லை என கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சுராணி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குரங்குகளுடன் கொண்டுவரப்பட்ட 5 வயதுள்ள ஒரு ஆண் சிங்கம் மற்றும் 6 வயதுள்ள ஒரு பெண் சிங்கம் ஆகியவை நேற்று கூண்டில் இருந்து வெளியே திறந்துவிடப்பட்டன. ஆண் சிங்கத்துக்கு லியோ எனவும், பெண் சிங்கத்துக்கு நைலா எனவும் அமைச்சர் சிஞ்சு ராணி பெயரிட்டுள்ளார்.

அமைச்சர் சிஞ்சு ராணி

இதுகுறித்து அமைச்சர் சிஞ்சு ராணி கூறுகையில், "இப்போது ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் தனித்தனியாக விடப்பட்டுள்ளன. அவை பழகிய பிறகு ஒன்றாக விடப்படும். விரைவில் வெளிநாட்டில் இருந்து வரிக்குதிரை மற்றும் அமெரிக்க புலி ஆகியவையும் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வர உள்ளன. அனுமன் குரங்கு பூங்காவுக்குள் உள்ள மரத்தில்தான் அமர்ந்துள்ளது. மரத்தின் கீழ் பகுதியில் குரங்குக்கு தேவையான உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. தேவையானால் கூடுதல் அனுமன் குரங்குகள் மீண்டும் கொண்டுவரப்படும்" என்றார்.


மேலும் படிக்க கேரளா: கூண்டிலிருந்து தப்பிய அனுமன் குரங்கு... சிங்கங்களுக்கு லியோ, நைலா என பெயர் வைத்த அமைச்சர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top