ஒன ப ட: கதன சநதல பலஜய அமசசரவயல தககவபபத சரய?

0

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்களை கருணாநிதி தனது அமைச்சரவையிலிருந்து நீக்கிய வரலாறு உண்டு. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்பும், அமலாக்கத்துறை கைதுசெய்த பின்பும் அமைச்சராகத் தக்கவைக்கப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர் வாய் திறந்தால் ஒட்டுமொத்த தி.மு.க அரசும் காலியாகிவிடும் என்ற அச்சத்தாலேயே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கத் தயங்குகிறார்கள். ஆகவேதான் விழுந்தடித்துக்கொண்டு அவரை ஒட்டுமொத்த தி.மு.க-வும் காப்பாற்றுகிறது. செந்தில் பாலாஜி விசாரணையின்போது வாய் திறந்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து பல நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். வேண்டுமென்றால் பாருங்கள்... அமலாக்கத்துறை விசாரிக்கவிருக்கும் எட்டு நாள்களும் அவர் ஐ.சி.யூ-வில்தான் இருப்பார். மீண்டும் அனுமதி பெற்று விசாரிக்க வந்தால், வேறொரு பிரச்னையைச் சொல்லி மறுபடியும் ஐ.சி.யூ-வுக்குச் சென்றுவிடுவார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சரானதற்கு ஊழல் குற்றச்சாட்டுதான் காரணம் என்பது ஊருக்கே தெரியும். நாளையே அவருக்கு மீண்டும் இலாகா ஒதுக்கப்பட்டால், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தைத் தலைமைக்கும் முறையாகக் கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்மையாகும்.’’

கோவை சத்யன், தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலர், தி.மு.க

``அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையை அனுப்பி, கைதுசெய்திருக்கிறது மத்திய அரசு. தனிநபர் பகையையும், ஒரு கட்சியினுடைய சித்தாந்தப் பகையையும் கொண்டு, பழிவாங்கப்படுகிறார் செந்தில் பாலாஜி. 33 ஒன்றிய அமைச்சர்கள்மீதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களோடு சேர்த்து ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களை, `பதவி விலகுங்கள்’ என ஏன் யாரும் சொல்லவில்லை... கொங்கு மண்டலம் முழுக்க அ.தி.மு.க கோட்டை என்ற நிலைமையைத் தகர்த்தெறிந்தவர் செந்தில் பாலாஜி. ஆகவேதான் அ.தி.மு.க-வை வைத்து தமிழக அரசியலில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வினர், செந்தில் பாலாஜியை முடக்கத் துடிக்கிறார்கள். இதுவரை செந்தில் பாலாஜி குற்றவாளி என எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. அவர் வழக்கை எதிர்கொள்வார். அவர்மீதான தீர்ப்பின் அடிப்படையில் கட்சித் தலைமையே நடவடிக்கை எடுக்கும். ஆனால், அரசியல் பழிவாங்கலுக்காக எங்கள் அமைச்சர் ஒருவரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.’’


மேலும் படிக்க ஒன் பை டூ: “கைதான செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தக்கவைப்பது சரியா?”
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top