சநதல பலஜய நககம அதகரம ஆளநரகக இலல!" - சடடததற அமசசர ரகபத

0

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ``ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழக முதலமைச்சரின் விருப்பம். ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கங்களை தருவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்று 2024 தேர்தலுக்கு பிறகு தான் தெரியும். அந்த அளவிற்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

நாங்கள் சொல்லும் விதிமுறைகளின்படி தான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சரவையில் ஒருவரை நீக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கா என்றால் கிடையாது. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும் வைத்துக் கொள்ளாததும் முதல்வரின் விருப்பமே, தவிர அது ஆளுநரின் விருப்பம் அல்ல.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் ஒவ்வொருத்தரையும் விலக்கி கொண்டு போகிறேன் என்று சொன்னால்... அப்படி செய்ய முடியுமா, முடியாது. இது ஜனநாயக நாடு, ஆளுநரின் சர்வாதிகார நாடு இல்லை.

அ.தி.மு.க போன்ற பா.ஜ.க-வுக்கு அடிமைகளாக இருக்கும் கட்சியினர் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்து மிரட்டி பணிய வைக்க செய்யும். அவர்களின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை இருக்குமே தவிர காவல்துறையாகவோ பாதுகாப்பு துறையாகவோ இருக்காது.

அமலாக்கத்துறை வழக்குகளின் நிலைமைகளை நாட்டு மக்கள் இன்று நன்றாக கவனித்து வருகின்றனர். அமலாக்கத் துறைக்காக நாங்கள் பயப்படப் போவது கிடையாது. நீதிமன்றம் இருக்கிறது இன்னும் ஜனநாயகம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி இருக்கின்றது என்ற நம்பிக்கையோடு தான் மக்கள் இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறையை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களை கை வைக்காது. ஐந்தாண்டுகள் மட்டுமல்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை தான்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது சில ஆவணங்களைத் தூக்கி வெளியே எறிந்தார்கள். அன்றைக்கு ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார். ஆவணத்தை வெளியே வீசுவதும், அப்படி வீசும் போது ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடும் வீடியோயும் வைரலானது. அதையே சாட்சியமாக வைத்து அப்போது விஜயபாஸ்கரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால்,நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதை 2024ல் மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.


மேலும் படிக்க ``செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை!" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top